மழைன்னா பெய்யும்... ஆனால் இப்படி பேயாய் மாறி வச்சு செய்யுதே... தென்கொரியாவில்!

Jul 16, 2023,10:16 AM IST
- சகாய தேவி

சியோல்:  தென் கொரியாவில் காட்டு காட்டு என காட்டிக் கொண்டிருக்கிறது மழை. வெளுத்து வாங்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இந்தியாவில் தென் மேற்குப் பருவ மழை வித்தியாசமாக பெய்து வருகிறது. வழக்கமாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும். ஆனால் அங்கு பெரியஅளவில் மழை இல்லை. இடையில் கொஞ்சம் வெளுத்தெடுத்தது அவ்வளவுதான். தற்போது வட மாநிலங்களை பிரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற வட மாநிலங்கள் பெரிய மழையையும் வெள்ளத்தையும் சந்தித்து வருகின்றன. உள்ளூரில் தான் இப்படி என்றால் வெளிநாட்டில், தென் கொரியாவில் இடைவிடாத கனமழையால் பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனராம்.




தென் கொரியாவில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  10 பேரைக் காணவில்லை. தற்போது அங்கு கோடைகாலம்தான். ஆனால் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகள் அல்லது வெள்ள  நீரால் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்டவைதான்.

நீரில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுக்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாக  உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வடக்கு சுங்சியோங் மாகாணம் தான் வெள்ளத்தால் கடும் பாதிப்பைசந்தித்துள்ளது. அங்குள்ள சியோங்ஜு நகரில் 430 மீட்டர் நிலத்தடி சுரங்கப்பாதையில் சிக்கிய சுமார் 15 கார்களை மீட்க பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

சனிக்கிழமை காலை இந்த சுரங்கப் பாதை வெள்ளத்தில் மூழ்கி விட்டது. எனவே அதற்குள் சிக்கிய கார்களுக்குள் இருந்தவர்கள் நிச்சயம் உயிரோடு இருக்க முடியாது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இறந்தவர்களில்  17 பேர் மற்றும் காணாமல் போனவர்களில் ஒன்பது பேர் உட்பட -- பெரும்பான்மையான உயிரிழப்புகள் வடக்கு கியோங்சாங் மாகாணத்தில்தான் நடந்துள்ளது. பெரும்பாலும் மலைப் பகுதியில் பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளோடு மூழ்கி இறந்துள்ளனர்.  வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், சிலர் அடித்துச் செல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இதற்கிடையே,தென் கொரியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை வரை அதிக மழை பெய்யும். மேலும் "கடுமையான" ஆபத்துகளுக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

வழக்கமாகவே தென் கொரியாவில் கோடை மழைக் காலத்தில் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும். கடந்த ஆண்டும் கூட இதேபோல வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தை சந்தித்தது, இதில் 11 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்