மும்பை: மும்பையில் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கனமைழ காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, செம்பூர், பிடி மெல்லோ ரோடு, ஏபிஎம்சி மார்க்கெட், டர்பே மாஃப்கோ மார்க்கெட், கிங்ஸ் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சூழல் காரணமாக வடக்கு ஆந்திர கடலோர பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மாஹே, ஏனாம், கர்நாடகாவின் உள்ள முக்கிய பகுதிகளிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}