போக்குவரத்து நெரிசல்.. வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலையில்.. கனரக வாகனங்கள் செல்ல தடை!

Aug 12, 2024,11:37 AM IST

சென்னை:  போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தகவல்  தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பணி நிமித்தம் காரணமாக பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவும் அத்தியாவசிய தேவைக்காகவும் போக்குவரத்து சேவை மிகவும் இன்றியமையாததாக திகழ்வதால் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.




குறிப்பாக கிளாபாக்கம் பஸ் நிலையம் வந்தது முதல் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது.  இதனை சமாளிக்க அரசு அவ்வப்போது  பல்வேறு திட்டங்களையும் வகுத்து அதனை செயல்படுத்தியும் வருகிறது. அதே சமயம் மக்கள் சிரமம் இல்லாமல் பயணிக்க ரயில், மெட்ரோ ரயில், பஸ்கள், போன்றவற்றை கூடுதலாகவும் இயக்கி வருகிறது. இருப்பினும் பல்வேறு மேம்பால பணிகள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வருகிறது. 


இந்த போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவில் அணிவகுத்து நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே கனரக வாகனங்கள் செல்வதால் பெரும் அச்சுறுத்தலாகவும்  உள்ளது.


குறிப்பாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூர்- கேளம்பாக்கம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. மக்கள் அதிக அளவு சென்று வரும் பகுதியாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால்  பள்ளி கல்லூரி மாணவிகள் செல்வதற்கும், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார்  தெரிவிக்கப்பட்டு வந்தது.


இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக  கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல்துறை ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.  அதன்படி வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு  இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்