வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் தொடர்பான பல முக்கியமான முடிவுகளை அமெரிக்கா எடுக்க உதவியவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் மரணமடைந்துள்ளார். 100வது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
இவர் பல சர்வதேச பிரச்சினைகளில் முக்கியத் தீர்வுகள் காண உதவியதால் புகழடைந்திருந்தாலும் கூட இந்தியாவுக்கு விரோதமாக நடந்து கொண்டவர். இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவை மடை மாற்றியவர் இவர்தான்.
ஜெர்மனியில் பிறந்த யூதரான இவர் அகதியாக அமெரிக்காவுக்கு வந்து செட்டிலானவர். பின்னர் குடியரசுக் கட்சியில் இடம் பெற்று, வெளியுறவு அமைச்சரானார். ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்டு ஆகிய இரு அமெரிக்க அதிபர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர். பல முக்கிய சர்வதேச வெளியுறவு முடிவுகளை எடுக்க உதவியவர்.
அமெரிக்காவின் வரலாற்றில் அதிபர் நிக்சனும், போர்டும் சில முக்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகளை எடுத்தனர். அதன் பின்னணியில் கிஸ்ஸிங்கர் உள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையிலான இறுக்கத்தைக் குறைத்து உறவை ஏற்படுத்தியவர் கிஸ்ஸிங்கர்தான். அதேபோல அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையிலான உறவிலும் மேம்பாட்டைக் கொண்டு வர உதவியவர் கிஸ்ஸிங்கர்தான். பனிப்போர் முடிவுக்கு வர கிஸ்ஸிங்கர் பெரும் பணியாற்றியுள்ளார்.
அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும் பாடுபட்டவர் கிஸ்ஸிங்கர்தான். வியட்நாம் போரின்போது அமெரிக்கா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கு மேலும் போரில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்று கூறி அமெரிக்காவை பின்வாங்க வைத்ததிலும் கிஸ்ஸிங்கர் நிறைய முயற்சித்துள்ளார். இதற்காகத்தான் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் கிடைத்தது.
100 வயதிலும் கூட அயராமல் உழைத்து வந்தார் கிஸ்ஸிங்கர் என்பது நினைவிருக்கலாம்.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}