ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

Apr 15, 2025,06:02 PM IST

மதுரை: ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி என்று இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.  இதற்கு நாடு முழுவதும் கண்டங்கள் வலுத்துள்ளன. ஆங்கில புத்தகங்களின் தலைப்பை இந்தியில் மாற்றியதற்கு  கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், மத்திய அரசின் இந்த முடிவு ஒரு கடுமையான பகுத்தறிவின்மை மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையைக் குறைக்கும் கலாச்சாரத் திணிப்பு. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இதனை மேற்கோள் காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், 




ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி!


ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி!


என்.சி.இ.ஆர்.டி. துவங்கி

எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு.


இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரும்பாக இல்லறம் இனிக்க காவேரி தாய் வேகமாய் வருகிறாள்!

news

உதயநிதி ஸ்டாலின் கைது : டெல்லியில் எம்.பிக்கள்.. தமிழ்நாடு முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்!

news

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கைது

news

உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூரில் தவெக மகளிர் அணி சார்பில் போலீசில் புகார்

news

வசவாளர்களை வாழ்க என சொல்லலாம்.. ஆனால் ஆபாசநிதிகளை.. அமைச்சர் என்.ஆனந்த் கண்டனம்

news

மெய்நட்பு!

news

பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!

news

நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!

news

சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்