பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து சென்னை, சேலம்... அடுத்தடுத்து பரவும் HMPV வைரஸ்

Jan 07, 2025,10:11 AM IST

டில்லி : இந்தியாவில் பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்திலும் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் குறித்து பீதி தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


சீனாவில் கடந்த சில வாரங்களாகவே HMPV  வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மிக வேகமாக இந்த வைரஸ் பரவி, குழந்தைகளை குறி வைத்து தாக்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை  பெறுவதற்காக ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் உலக நாடுகள் பலவும் பதற்றம் அடைந்து வருகின்றன. 




இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் HMPV வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று காலை பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொன்ன சிறிது நேரத்திலேயே பெங்களூருவில் மற்றொரு குழந்தை, குஜராத்தின் அகமதாபாத்தில் 2 மாத குழந்தைக்கும் வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.


இதைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் HMPV வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என்பதால் பொது மக்கள் யாரும் கவலைப்பட அவசியமில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் ஜனவரி 6ம் தேதி, மத்திய சுகாதார செயலாளருடன் நடைபெற்ற வீடியோ கான்பிரன்சிஸ் ஆலோசனையில் ஈடுபட்ட போது, இந்த வைரஸ் ஒன்றும் புதியது கிடையாது. 2001 ம் ஆண்டு முதலே இருந்து வருவது தான். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்து, போதிய ஓய்வு, அறிகுறிகளுக்கான மருந்துகளும் எடுத்துக் கொண்டே குணமாகி விடும் என கூறி உள்ளனர்.


இது இன்ஃபுளுயன்சா வகை வைரசை சேர்ந்தது தான். இருந்தாலும் கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வது, கைகளின் சுத்தத்தை பாதுகாப்பது போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும், லேசான அறிகுறிகள் இருக்கும் போது தேவையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்