மக்களே உஷார்.. சீனாவில் பரவும் புதிய hmpv வைரஸ்.. உண்மை நிலை என்ன.. என்னெல்லாம் பாதிப்பு வரும்?

Jan 03, 2025,08:41 PM IST

பீஜிங் : சீனாவில் புதிதாக பரவி வரும் hmpv எனப்படும் human metapneumovirus வைரஸ் வேகமாக பரவி வருவதாக சோஷியல் மீடியாக்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் விரைவில் அவசர நிலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


2019ம் ஆண்டில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டி வைத்தது. கோடிக்கணக்கான உயிர்களை பலி கொண்ட பிறகு இதற்கான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது தான் உலக நாடுகள் பலவும் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளன. இருந்தாலும் கோவிட் சமயத்தில் போடப்பட்ட பல கட்டுப்பாடுகள் உலகின் பல நாடுகளிலும் தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. 


தற்போது கொரோனா பரவலில் இருந்து விடுபட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் சீனாவில் பரவி வருவதாக சோஷியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. ஆனால் சீன சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார மையம் இது வரை புதிய வைரஸ் பரவுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிட்டு, உறுதி செய்யவில்லை.  மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றோ, அவசர நிலை அறிவிக்கப்படவில்லை என்றும் இதுவரை உலக சுகாதார மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.




சீன மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் மாஸ்க் அணிந்த படி, சிகிச்சைக்காக காத்திருப்பது போன்ற வீடியோவும், நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவது போலவும், தகன மேடைகள் பிணங்களால் நிரம்பி வழிவதாகவும் பலர் சோஷியா மீடியாவில் வீடியோ மற்றும் தகவல் பரப்பி வருகின்றனர். ஆனால் உண்மை அது கிடையாது. சீனாவில் தற்போது நிமோனியா, இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ்கலால் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சிகிச்சை பெறுவதற்காக தான் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.


அதே போல், human metapneumovirus என்பது தற்போது புதிதாக பரவும் வைரஸ் கிடையாது. இது 2021ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைரஸ் வகையாகும். தற்போது இன்ஃபுளுயன்சா ஏ மற்றும் human metapneumovirus ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தான் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். human metapneumovirus என்பது 3 ஆண்டுகளுக்கு முன் பரவிய கோவிட் 19 வகை வைரசை போன்றது தான். அதற்கான தடுப்பு மருந்துகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. குழந்தைகளையும், வயது முதிர்ந்தவர்களையும் இந்த வைரஸ் எளிதில் பாதிக்கும் என்பதால் அதிகமானவர்களுக்கு நோய் பரவி உள்ளது.


இதன் அறிகுறிகள் நிமோனியா காய்ச்சல் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், மூக்கில் தண்ணீர் வடிதல் போன்ற சாதாரண அறிகுறிகள் தான் இருக்கும். இது எளிதில் பரவக் கூடியது என்பதாலேயே பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிந்து கொண்டுள்ளனர். இதனால் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என உலக சுகாதார மையம் கேட்டுக் கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்