சென்னை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை வரை வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காலை வரை 1.70 லட்சம் கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதேபோல் ஒகேனக்கலில் உள்ள ஐந்து அருவிகளும் தண்ணீரால் மூழ்கியுள்ளன.
ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் குளிக்கவும் 16 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற ஆற்றுப் பகுதிகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம், மேட்டூர் அணையில் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2.20 லட்சம்கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}