சென்னை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை வரை வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காலை வரை 1.70 லட்சம் கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதேபோல் ஒகேனக்கலில் உள்ள ஐந்து அருவிகளும் தண்ணீரால் மூழ்கியுள்ளன.
ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் குளிக்கவும் 16 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற ஆற்றுப் பகுதிகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம், மேட்டூர் அணையில் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2.20 லட்சம்கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
{{comments.comment}}