ஒகேனக்கல் காவிரி ஆற்றில்.. பெரும் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

Aug 01, 2024,02:14 PM IST

சென்னை:   ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை வரை வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 1. 82 லட்சம் கன அடியாக  அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காலை வரை 1.70 லட்சம்  கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.




இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதேபோல் ஒகேனக்கலில் உள்ள ஐந்து அருவிகளும் தண்ணீரால் மூழ்கியுள்ளன.


ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் குளிக்கவும் 16 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற ஆற்றுப் பகுதிகளில்  செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மறுபக்கம், மேட்டூர் அணையில் பாதுகாப்பு  கருதி விநாடிக்கு 2.20 லட்சம்கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்