பிரதமர் மோடியை தொடர்ந்து.. ஏப்ரல் 4 , 5ம் தேதிகளில் தமிழ்நாட்டில் அமித்ஷா பிரச்சாரம்!

Apr 02, 2024,06:05 PM IST

சென்னை:  தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். 


2024 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


பாஜக கூட்டணியில், பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. சென்ற முறை பாஜக கூட்டணியில் இருந்த, முக்கிய கட்சியான அதிமுக இந்த முறை கூட்டணியில் இருந்து விலகி தனி அணியாக களம் கண்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி (அதிமுக) தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனை கருத்தில் கொண்டு பாஜக கூட்டணி, தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.




பிரதமர் மோடியும் பல முறை  தமிழகம் வந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக கூட்டங்களில் பங்கேற்றார். கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தமிழகம் வந்த பிரதமர் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருடன் ஒன்றாக பங்கேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஏப்ரல் 4 , 5 ஆகிய 2 நாட்கள் பிரச்சாம் செய்கிறார். 


சென்னை, மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாகவும், சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தென்சென்னை பாஜக வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்