தால் ஏரியில் பற்றி எரிந்த படகுகள்.. வேகமாக பரவிய தீயில் சிக்கி ஹவுஸ் போட்டுகள் நாசம்!

Nov 11, 2023,05:51 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள தால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹவுஸ் போட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பல படகுகள் நாசமாகின. ஒரு படகில் ஏற்பட்ட தீவிபத்தால் மற்ற படகுகளுக்கும் தீ பரவி இந்த சம்பவம் நடந்துள்ளது.


நேற்று இரவு தால் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹவுஸ் போட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது அருகில் இருந்த பிற ஹவுஸ் போட்டுகளுக்கும் பரவியது. இதையடுத்து ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகளும் பற்றி எரிய ஆரம்பித்தன.


இந்த படகுகள் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்கும்போது ஏரியே தீயில் எரிவது போல காட்சி அளித்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.




தீ எப்படி பரவியது என்று தெரியவில்லை. கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் அல்லது மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்