Trump Tax: அமெரிக்காவை ஆட்டம் காண வைக்க நம்மால் முடியாதா.. நாம் என்ன செய்ய வேண்டும்?

Aug 07, 2025,06:26 PM IST

சென்னை:  அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவைக் குறி வைத்து வரிகளை விதித்துக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியா மற்றும் பிரேசில் மீதுதான் அதிக அளவிலான வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் தலா 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.


இது இந்தியர்களை கொதிப்படைய வைத்துள்ளது. என்ன ஒரு ஆணவம்.. என்று பலரும் டிரம்ப்பை கடுமையாக வசை பாடி வருகிறார்கள். இந்தியா இதற்கு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் அது அத்தனை எளிதானது அல்ல. அமெரிக்கா போல நாமும் அதிரடியாக, உடனடியாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட முடியாது.


அதேசமயம், இந்தியா மீது விதித்து வரும் அதீத வரிகள், இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு சவாலாக இருந்தாலும், அதைச் சமாளிக்க இந்தியாவிடமும் வழிகள் உள்ளன. 


பஹல்காம் பொய்யை அம்பலப்படுத்தியதால் டிரம்ப் கோபமா?




அமெரிக்கா தனது பொருட்களுக்கு வரி விதித்தால், அதற்குப் பதிலடியாக இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கிறது. இதைத்தான் பரஸ்பர வரி விதிப்பு (Reciprocal Tariffs) என்று சொல்கிறோம். உதாரணத்திற்கு, அமெரிக்கா தனது மோட்டார் வாகனங்களுக்கு வரி விதித்தால், இந்தியாவும் அமெரிக்க மோட்டார் வாகனங்களுக்கு வரி விதிக்கிறது. இது ஒருவிதமான வர்த்தகப் போர். இந்திய அரசு இந்தச் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.


அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பின்னால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது போன்ற சில காரணங்கள் உள்ளன. கூடவே, பஹல்காம் தாக்குதலை நான்தான் தலையிட்டு நிறுத்தினேன் என்று கூறிய டிரம்ப்பை, இல்லை அவர் சொல்வது பொய் என்று மறைமுகமாக இந்தியா அம்பலப்படுத்தியதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.


இந்தியா தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இந்த நடவடிக்கை "நேர்மையற்றது, நியாயமற்றது மற்றும் காரணமில்லாதது" (unfair, unjustified and unreasonable) என்று கூறியுள்ளது. அத்துடன், "இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்றும் உறுதியளித்துள்ளது.


இந்தியா கையாளும் முக்கிய உத்திகள்


அமெரிக்காவின் வரி விதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா ஏற்கனவே பல உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது:


Trade Diversification அதில் ஒன்று. அமெரிக்காவை மட்டும் நம்பாமல், இந்தியா தனது வர்த்தக உறவுகளை பல நாடுகளுடன் விரிவுபடுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற பிராந்தியங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம், ஒரு நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்ற நாடுகளைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.


Make in India' Initiative -  'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனால், இறக்குமதியைச் சார்ந்து இருப்பது குறைந்து, உள்நாட்டுப் பொருளாதாரம் வலுப்பெறும். குறிப்பாக, ஜவுளி, ரத்தினங்கள், வாகன உதிரிபாகங்கள் போன்ற துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது.


இந்தியாவிடம் வலுவான பொருளாதார அடிப்படை அதாவது Strong Economic Fundamentals உள்ளது. இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவை அவ்வளவு பெரிதாகப் பாதிக்காது. கொரானாவுக்குப் பின்னர் உலக நாடுகள் பலவும் பொருளாதார சீரழிவை சந்தித்தபோது இந்தியா மட்டும் தடுமாறாமல் நின்றது இதற்கு உதாரணம். நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி (RBI) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அமெரிக்காவின் வரி விதிப்புகள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இந்தியா இந்த சவாலைச் சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகப் பல்வகைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளால், இந்தியா தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியும்.


இதேபோல நம்மை பெரிதாக நம்பியுள்ள அமெரிக்கத் தயாரிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக மக்களே புறக்கணிக்க ஆரம்பிக்கலாம். அதற்குப் பதில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம் தர வேண்டும். அதற்கு அரசும் சரி, மக்களும் சரி, தொழில் நிறுவனங்களும் சரி இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஒரு போர்க்கால அடிப்படையில் அமெரிக்காவுக்கான பதிலடியை நாம் புத்திசாலித்தனமாக தர ஆரம்பித்தால் அமெரிக்கா நம் வழிக்கு வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!

news

2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?

news

அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை

news

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு

news

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?

news

71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு

news

அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!

news

சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்