3 இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும்.. பெண்களே இதைத் தெரிஞ்சுக்கோங்க!

Dec 03, 2025,12:07 PM IST

- ச.சித்ரா தேவி


சென்னை: தமிழ்க் கலாச்சாரத்தில் குங்குமம் என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக பெண்களுகு குங்குமம் மிக மிக முக்கியமானது, இதைப் புனிதமாக நமது கலாச்சாரத்தில் சொல்லி வைத்துள்ளனர்.


பாரம்பரியமாக, ஒரு பெண் தனது வாழ்க்கையில் மூன்று புனிதமான இடங்களில் கட்டாயம் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லி வைத்துள்ளனர்.


1. முன் நெற்றி




இது மிகவும் முக்கியமான இடம். ஞானம், தெளிவு மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற இந்த இடத்தில் குங்குமம் இடுவது அவசியம். இது மங்களத்தின் அடையாளம் மட்டுமல்ல, தெய்வீக சக்தியை ஈர்க்கும் இடமாகவும் கருதப்படுகிறது.


2. வகிடு மத்தி


உச்சி வகிட்டின் மத்தியில் குங்குமம் இடுவது, கணவரின் ஆயுளையும், குடும்பத்தின் சௌபாக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்பது ஐதீகம். திருமணமான பெண்களின் அதிர்ஷ்ட ரேகை இந்த இடத்தில்தான் இருப்பதாக நம்பப்படுகிறது.


3. மாங்கல்யம் (தாலிச் சரடு):


திருமணத்தின் மிக உயர்ந்த சின்னமான தாலிக் கயிற்றில் (மாங்கல்யச் சரடில்) தினமும் குங்குமம் வைத்து பூஜிப்பது, கணவன்-மனைவி பந்தத்தை பலப்படுத்தும். இதை சக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையமாகக் கருதுவதுண்டு.


ஸ்டிக்கர் பொட்டு வைப்பதைத் தவிர்த்து, பசும்பால் அல்லது சந்தனத்தை பயன்படுத்தி பாரம்பரிய குங்குமத்தை மட்டுமே பயன்படுத்துவது மிகுந்த மங்களத்தைக் கொடுக்கும். மேலும், எவ்வளவு விலை உயர்ந்த தங்க நகைகளைக் காட்டிலும், தாலிக் கயிற்றிற்குத்தான் (திருமாங்கல்யச் சரடிற்குத்தான்) அதிக தெய்விக சக்தியும், மதிப்பும் சாஸ்திர ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. 


அதேபோல தினமும் காலையில் அக்கினி பகவானை வணங்கி அதன் பின் அடுப்பு பற்ற வைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி நாட்களில் அடுப்பைத் துடைத்து மஞ்சள் குங்குமம் இட்டு அதன் பின் அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.


இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனசில் வச்சுக்கங்க. ஒருவருக்கு உணவு பரிமாறும் போது வெறுப்புடனோ கோபமாகவோ பரிமாறிக் கூடாது. இது பெண்களுக்கு மட்டும் இல்லிங்கை. ஆண்களுக்கும் கூட பொருந்தும். பாசத்துடனும், சந்தோஷத்துடனும் உணவு பரிமாறிப் பாருங்க.. உறவும் வலுப்படும், அன்பும் கூடும். 


(ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்