- தேவி
தென்காசி, குற்றாலம் பக்கம் போனீங்கன்னா பரோட்டோ செம பேமஸ்.. விருதுநகரிலும் கூட வெளுத்துக் கட்டலாம்.. இப்படி ஊர் ஊருக்கு ஒரு சாப்பாடு பிரபலமா இருக்கும். அதே மாதிரி, இந்த மதுரை பக்கம் போய்ட்டாலே, வாயெல்லாம் அசைவ உணவுகளை ஆட்டோமேட்டிக்கா தேட ஆரம்பித்து விடும். அந்த ஊர் கொத்துப் பரோட்டா, மட்டன் சுக்கா, கோழி வறுவல்.. என ஒவ்வொரு ஐட்டமும் வேற ரகம்.. மறக்க முடியாத டேஸ்ட்டில் இருக்கும்.
அப்படிப்பட்ட சூப்பரான, சுவையில் ஒரு மட்டன் சுக்கா எப்படி டேஸ்டியா ஈஸியா பண்றதுன்னு பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :

மட்டன் -கால் கிலோ
பெருஞ்சீரகம் - ஒன்றரை ஸ்பூன்
மிளகு - ஒன்றரை ஸ்பூன்
பூண்டு -5
மிளகாய் வத்தல் -5
முதல்ல ஆட்டுக்கறியை தனியா நல்லா வேக வச்சு எடுத்து வச்சுக்கணும். எந்த அளவுக்கு வெந்து இருக்கணும்னா ஆட்டுக்கறியை தொட்டுப் பார்க்கும்போது பஞ்சு மாதிரி இருக்கணும். அப்புறம் வடை சட்டில பெருஞ்சீரகம், மிளகு பூண்டு மிளகாய் வத்தல் எல்லாத்தையும் போட்டு எண்ணெய் ஊத்தி வதக்கணும்.
அப்புறம் அத மிக்ஸியில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைச்சு எடுத்துக்கலாம். இப்ப மறுபடியும் அடுப்புல வடை சட்டியை வச்சு நம்ம தனியா வேக வச்சிருந்த மட்டனை எண்ணெய் ஊத்தி வேக விடறோம்.
நம்ம அரைச்சு வச்சிருந்த பேஸ்டையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு அஞ்சு நிமிஷம் லோ ஃபிளேமில வச்சு வேகவிடுறோம். இதுக்கு வேற எந்த மசால் பொடியும் தேவையில்லை.
கடைசியா இறக்கிட்டு கொஞ்ச மல்லித்தழை தூவி விட்டா டேஸ்ட்டான சிம்பிளான மட்டன் சுக்கா ரெடி. அவ்வளவுதாங்க.. சாப்பிட்டுப் பாருங்க.. அவ்வளவு டேஸ்டா இருக்கும்... கூட நாலு வாய் சோறு உள்ளே இறங்கும்.
இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே.. இன்னிக்கு எப்படின்னுதானே கேக்கறீங்களா.. இன்னிக்கு வேண்டாம்.. அதான் சண்டே வருதுல்ல.. அன்னிக்கு வச்சு அசத்திருங்க.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}