முளைக்கீரை சின்ன வெங்காயம் பொரியல்.. வளரும் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது.. பெரியவர்களுக்கும்தான்!

Mar 11, 2025,01:30 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தாராளமாக கிடைக்கும் இந்த முளைக்கீரை என்பதை தான் (Amaranth)என்று அழைப்பார்கள். இந்தக் கீரையில் தண்டுகளில் ஏகப்பட்ட சத்துகள் அடங்கியுள்ளன. கீரை பிளஸ் தண்டு சேர்த்து சமைக்க அதீத நன்மைகள் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.


முளைக்கீரை சின்ன வெங்காயம் பொரியல் செய்யத் தேவையானவை:

முளைக்கீரை ஒரு கட்டு

சின்ன வெங்காயம் 15

பூண்டு 5 பல் தட்டிக் கொள்ளவும்

வர மிளகாய் இரண்டு

தாளிக்க: நல்லெண்ணெய்- இரண்டு ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்- ஒரு ஸ்பூன்.

உப்பு தேவைக்கு ஏற்ப




செய்முறை:

முளைக்கீரையின் வேர் பகுதி நீக்கிவிட்டு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவவும்.  அதனை ஒரு பிளேட்டில் மாற்றி தண்ணீர் வடிந்தவுடன் தண்டுடன் பொடி பொடியாக கட் செய்யவும். 

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு ,உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு தட்டிய பூண்டு வர மிளகாய் சேர்க்கவும். சிறிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.  பிறகு பொடியாக நறுக்கிய கீரையை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்டில் உள்ள தண்ணீரே கீரை வதங்க போதுமானது.

சிறிய டிப்ஸ்: கடைசியில் உப்பு போட்டால் கீரையின் பச்சை நிறம் மாறாது.

வேண்டுமெனில், பாசிப்பருப்பு வேக வைத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம் ,அல்லது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த கீரை பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

முளைக் கீரையின் பயன்கள்:

தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ,தாமிரச்சத்து, மணி சத்து நிறைந்துள்ளது. 85.7 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளன. இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

சரும நோய்களை விரட்டும். செரிமான கோளாறுகள் போக்கும். மலச்சிக்கலை போக்கும். கண் எரிச்சலை போக்கும். இதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!

news

யாசகத்தோழி!

news

வெளியில் புன்னகைத்து.. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும்.. நெருப்புக் குழம்பிற்குச் சொந்தக்காரி!

news

பஹல்காம் பரிதாபம்.. சிந்தூரைப் பார்த்து சினம் கொண்டவனை சிந்தூர் சாய்த்தது!

news

சிந்தனைச் சிதறல்.. ஒருவருக்கு தவறெனத் தோன்றுவது மற்றவருக்கு சரியெனத் தோன்றுகிறது!

news

Fermented rice: பழைய சோறு.. வெயில் வந்தாலே.. இதுவும் நம்மை நாடி வந்து விடும்!

news

Housewives எல்லாம் சும்மா இல்லைங்க.. அவர்கள் பாராட்டப்படாத உழைப்பாளிகள்!

news

Deepa Ravi Poem: உன் அருகில் நான் அமர்ந்தால்.. என் மனமோ!

news

World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்