- ஸ்வர்ணலட்சுமி
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தாராளமாக கிடைக்கும் இந்த முளைக்கீரை என்பதை தான் (Amaranth)என்று அழைப்பார்கள். இந்தக் கீரையில் தண்டுகளில் ஏகப்பட்ட சத்துகள் அடங்கியுள்ளன. கீரை பிளஸ் தண்டு சேர்த்து சமைக்க அதீத நன்மைகள் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.
முளைக்கீரை சின்ன வெங்காயம் பொரியல் செய்யத் தேவையானவை:
முளைக்கீரை ஒரு கட்டு
சின்ன வெங்காயம் 15
பூண்டு 5 பல் தட்டிக் கொள்ளவும்
வர மிளகாய் இரண்டு
தாளிக்க: நல்லெண்ணெய்- இரண்டு ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்- ஒரு ஸ்பூன்.
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை:
முளைக்கீரையின் வேர் பகுதி நீக்கிவிட்டு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவவும். அதனை ஒரு பிளேட்டில் மாற்றி தண்ணீர் வடிந்தவுடன் தண்டுடன் பொடி பொடியாக கட் செய்யவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு ,உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு தட்டிய பூண்டு வர மிளகாய் சேர்க்கவும். சிறிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது சேர்க்கவும். நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கீரையை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்டில் உள்ள தண்ணீரே கீரை வதங்க போதுமானது.
சிறிய டிப்ஸ்: கடைசியில் உப்பு போட்டால் கீரையின் பச்சை நிறம் மாறாது.
வேண்டுமெனில், பாசிப்பருப்பு வேக வைத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம் ,அல்லது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த கீரை பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
முளைக் கீரையின் பயன்கள்:
தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ,தாமிரச்சத்து, மணி சத்து நிறைந்துள்ளது. 85.7 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளன. இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
சரும நோய்களை விரட்டும். செரிமான கோளாறுகள் போக்கும். மலச்சிக்கலை போக்கும். கண் எரிச்சலை போக்கும். இதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
சுதந்திர தாகம் தணிந்து... சுதந்திர மோகம் எழுந்தது ஏனோ???
தீரமும் வீரமும் செறிந்த.. விடுதலை முழக்கம்.. சுதந்திரக் காற்றை சுவாசிக்க இந்தியா கடந்து வந்த பாதை!
முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தினம்.. கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார்
அறிவுஜீவி நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்து.. களையெடுத்து அகற்ற வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு
சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய் – தேவகோட்டை பள்ளியில் வித்தியாசமான சுதந்திர தின விழா!
போர் இல்லா உலகைத் தேடும் புவி மகளோ பாரதம்!
இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
சுதந்திரம் எனும் ஒளி
சுதந்திரம் என்ன சும்மாவா கிடைத்தது?
{{comments.comment}}