- கா. ச. ஷர்மிளா
இஸ்லாமிய வீடுகளில் ஒரு சூப்பரான ஸ்வீட் பண்ணுவாங்க.. சாப்பிட அத்தனை டேஸ்ட்டாக இருக்கும். அது என்ன தெரியுமா.. கடற்பாசி கொண்டு செய்யும் ஒரு ஜெல்லி போன்ற ஒரு இனிப்பு வகைதான் அது.
அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் வெண்மையான மெல்லிய குச்சிகள் போன்று காணப்படும் இதற்கு கடல்பாசி என்றும் அகர் அகர் (agar agar) என்றும் ஸி கிராஸ் (sea grass) என்றும் கூறலாம்
கடற்பாசியின் பயன்கள் இது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், மற்றும் புரதம் உள்ளன. இது நம் செரிமான மண்டலத்துக்கும், இருதயஆரோக்கியத்திற்கும்,,எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

கடல்பாசி உடலின் வெப்பத்தை சீராக்கி சமநிலையில் வைக்க உதவுகிறது . உடலின் உஷ்ணத்தை குறைக்கிறது. அல்சர் போன்ற நோய்க்கு அரு மருந்தாக செயல்படுகிறது. சரி அதை எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.
செய்முறை:
முதலில் கடற்பாசியை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறின கடற்பாசியை ஒரு பேனில் தண்ணீரை ஊற்றி கடற்பாசியை சேர்த்து மிகக் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும்போது தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகுசிறிதளவுஉப்பு சேர்க்க வேண்டும் ஏனென்றால் இனிப்புக்கு உப்பு சேர்த்தால் இனிப்பை எடுத்துக்காட்டும்
கொதித்த கடற்பாசியை கரண்டியால் எடுத்து சிறிதளவு தண்ணீரில் ஊற்றும்போது தண்ணீரில் சிறிது சிறிதாக கரையும் அளவுக்கு இருக்கும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும் பிறகு கடற்பாசியை ஒரு அகன்ற தட்டில் ஊற்ற வேண்டும் அவ்வாறு ஊற்றும் போது உங்களுக்கு பிடித்த வெண்ணிலா எசன்ஸ் அல்லது பாதாம் மில்க் எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு தங்களுக்கு பிடித்த நட்ஸ் வகைகளை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி அதனோடு சேர்த்துக் கொள்ளலாம். அல்லது நன்றாக ஊறவைத்தும் பின்னர் சாப்பிடலாம்.
அதேபோல இன்னொரு அருமையான ரெசிப்பியும் இருக்கு.. அது கடற்பாசி பாயாசம்!
இது ஸ்வீட் என்பதை விட மிகவும் நல்ல அருமருந்து என்றே சொல்லலாம்
மேலே சொன்ன செய்முறை அப்படியே செய்து ஜெல்லி கொதிக்கும் போது நாம் அதனுடன் நன்றாக கொதிக்க வைத்த ஆறின பாலை சேர்த்து நமக்கு பிடித்த நட்ஸ் வகைகளை சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டு நெயில் வறுத்து பாயசத்திற்கு சேர்ப்பது போல் சேர்த்து சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும் என்றால் சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சுகர் கேரையும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பாயாசத்தை கொடுக்கலாம்.
இந்த பாயாசம் வயிற்றுப்போக்கு போகும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் யாராக இருந்தாலும் வயிற்றுப்போக்கு அதிகமாக போகும் போது இந்த பாயாசத்தை நாம் சர்க்கரை இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் சர்க்கரை இல்லாமல் செய்து கொடுக்கும் போது அந்த பாயாசம் வயிற்றுப்போக்கை நிறுத்தி விடும்.
இன்றும் இஸ்லாமிய குடும்பங்களில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இதுதான் முதலில் மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதை ஆறுவதற்கு முன் குடிக்க வேண்டும். ஏனென்றால் இது ஆறி விட்டால் ஜெல்லி ஆக மாறிவிடும். இனிப்பு பிடிக்காதவர்கள் இந்த கடற்பாசியை ஸ்பைசியாகவும் செய்து சாப்பிடலாம்.
(கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
புற்றுநோயின் வேதனையை விட.. மருத்துவமனையின் நோகடிக்கும் போக்கு.. நோயாளிகள் புலம்பல்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!
தடம் மாறும் தமிழர் பண்பாடு!
எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!
{{comments.comment}}