சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புடைய போதை பொருள் பறிமுதல்

Sep 27, 2024,12:43 PM IST

சென்னை:   சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய புலனாய்வு துறை பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சமீப காலமாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும் இது போன்ற போதைப்பொருளின் புழக்கம் குறைந்தபாடில்லை.




அந்த வரிசையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு கப்பல் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர்  கப்பலை சோதனையிட்டனர்.


அப்போது 250 மூட்டைகளில் 50 கிலோ குவார்ட்ஸ் பவுடரை பதித்து வைத்தது தெரிய வந்தது. அதில் 112 கிலோ சூடோ எப்ரிடின் போதைப்பொருள் பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் 110 கோடியாகும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


சென்னை துறைமுகத்தில் இவ்வளவு அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரைணயை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்