சென்னை: சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய புலனாய்வு துறை பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும் இது போன்ற போதைப்பொருளின் புழக்கம் குறைந்தபாடில்லை.
அந்த வரிசையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு கப்பல் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் கப்பலை சோதனையிட்டனர்.
அப்போது 250 மூட்டைகளில் 50 கிலோ குவார்ட்ஸ் பவுடரை பதித்து வைத்தது தெரிய வந்தது. அதில் 112 கிலோ சூடோ எப்ரிடின் போதைப்பொருள் பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் 110 கோடியாகும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் இவ்வளவு அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரைணயை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை
இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்
சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்
காதலிக்க நேரமில்லை.. காதலிப்பார் யாருமில்லை.. கண்ணதாசன் படைத்த காவியக் காதல் விருந்து!
ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு
படோடி கோப்பையைக் கைவிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.. விளக்கம் கொடுத்த பிசிசிஐ!
ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !
இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்
{{comments.comment}}