- மஞ்சுளா தேவி
தூத்துக்குடி: அடக் கொடுமையே.. ஊர் முழுக்க வெள்ளம் வந்து வீடெல்லாம் நனஞ்சு, முங்கிப் போய் கிடந்த அந்தக் கொடுமை கூட இன்னும் மனதிலிருந்து அகலாத நிலையில், இப்போது இந்த அக்கப்போரா.. பார்க்கவே பகீர் என்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நான்கு நாட்களாக மூடிக் கிடந்த டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று திறந்தனர்.. திறந்த வேகத்தில் கூடிய கூட்டம் பார்க்கவே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. (குடி)மகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாட்டில்களை வாங்கி சென்றனர்.
வரலாறு காணாத கனமழையால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது கூட நிவாரணத்தை வழங்க படகு மூலம் மீட்பு படையினர் சென்று வழங்க முடிந்தது. ஆனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் நிவாரணத்தை கொடுக்க கூட வழியில்லை. இரண்டு நாள் கழித்து விமானப்படை மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இப்படிப்பட்ட கடும் சூழலில் பல்வேறு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக உள்ளனர்.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோரப்பள்ளம் ஏரி உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி ஊர் முழுவதையும் ஆக்கிரமித்தது. இதனால் பல்வேறு நடுத்தர மக்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. பல்வேறு பொருட்கள் நீருக்கு இறையாக்கின. இன்னும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் பழைய நிலைமைக்கு மீண்டு வர முடியாமல் மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கடந்த நான்கு நாட்களாக வெள்ள பாதிப்பால் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி தவித்து இருந்தனர். பலர் வேலைக்குச் செல்லாமல் தங்களின் வாழ்வாதாரத்தை நினைத்து கவலை கொண்டு வருகின்றனர். வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்து தவித்த மக்கள் கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
முழுமையாக சோகம் தீராத நிலையில் டாஸ்மாக் கடைகளை இவ்வளவு அவசரமாக திறக்க வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள். காரணம், கடைகளில் கூடிய கூட்டத்தைப் பார்த்தபோது பகீர் என்று உள்ளது. குறிப்பாக ஏழை பெண்கள் இந்தக் கடைத் திறப்பையும், அதில் கூடிய கூட்டத்தையும் நிச்சயம் ரசிக்கவில்லை.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடை திறப்பு தேவையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தயவு செய்து யோசிக்க வேண்டும். வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக் கூட டைம் கொடுக்காமல் கடைகளைத் திறந்து விட்டால், அன்றாடம் பிழைக்கும் அப்பாவி மக்களின் நிலைமை என்ன ஆகும்.. மேலும் சில நாட்கள் கழித்துக் கடைகளைத் திறந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாகும்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}