கணவன் மனைவி – கதையும் மனையும் !

Nov 05, 2025,02:51 PM IST

- கவிதா உடையப்பன்


உத்தரவு பெறவே, உத்தமரிடமே 

உகந்த நேரத்தில், உள்ளார்ந்த வார்த்தைகளை 

உதிர்த்திடுவார், அந்த உத்தமி !


கஞ்சப் பாட்டி, பிசுகி வைக்கும்  

வெஞ்சனத்தை உண்டபின்  

மிஞ்சிக்கிடக்கும் தேங்காய் கீற்றை 

நெஞ்சம் மகிழ, கடித்து பசியாற்றினார் மௌனத் தாத்தா ! 


போதிய சம்பளம் இன்றி விரட்டும் 

பொல்லாத மனைவி மிரட்டும் 

வேலையாட்களை, சன்மானத்தொடு சமாதானப்படுத்துவார் 

வேட்டியை தும்பைப்பூ போல துவைத்துடுத்தும் கணவர்  !




கண்ணாலே பேசி, கண்ணாளனை மடக்கியவள்,  

கணக்குகள் தப்பி, காலங்கள் கடந்து தனித்து நிற்கிறாரே இன்று ! 


கண் துணியை பின்னி, தன்னை பொன்னைப்போல் பேணி 

மழையைப்போற்றி  மண்ணை வணங்கிய,

மணப்பெண்ணின் கரம் பிடித்த மணவாளன், 

கண்ணும் கருத்துமாய், மின்னும் கதிரவனின் கீழ், 

பண்ணையை செம்மையாக நடத்தினான் ! 


அறிந்தவளை அறியாதவள் என்று அன்று சித்தரித்தவன்,

அவள் இருந்தும் ஆதரவற்றுக் கிடக்கிறான் !


அப்பச்சி உழைத்துச்சேர்க்க, ஆத்தாள் அருவாக்கி சேமிக்க 

அவரைக்காய் பந்தலிலே காய்க்க, ஏலக்காய் அடுப்பங்கரையில் மணக்க 

ஆர்பாட்டம் இல்லாமல், அன்யோன்யமாய் வாழ்ந்தனர் அன்புத் தம்பதியர் ! 


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!

news

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்

news

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை

news

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

அதிகம் பார்க்கும் செய்திகள்