- கவிதா உடையப்பன்
உத்தரவு பெறவே, உத்தமரிடமே
உகந்த நேரத்தில், உள்ளார்ந்த வார்த்தைகளை
உதிர்த்திடுவார், அந்த உத்தமி !
கஞ்சப் பாட்டி, பிசுகி வைக்கும்
வெஞ்சனத்தை உண்டபின்
மிஞ்சிக்கிடக்கும் தேங்காய் கீற்றை
நெஞ்சம் மகிழ, கடித்து பசியாற்றினார் மௌனத் தாத்தா !
போதிய சம்பளம் இன்றி விரட்டும்
பொல்லாத மனைவி மிரட்டும்
வேலையாட்களை, சன்மானத்தொடு சமாதானப்படுத்துவார்
வேட்டியை தும்பைப்பூ போல துவைத்துடுத்தும் கணவர் !

கண்ணாலே பேசி, கண்ணாளனை மடக்கியவள்,
கணக்குகள் தப்பி, காலங்கள் கடந்து தனித்து நிற்கிறாரே இன்று !
கண் துணியை பின்னி, தன்னை பொன்னைப்போல் பேணி
மழையைப்போற்றி மண்ணை வணங்கிய,
மணப்பெண்ணின் கரம் பிடித்த மணவாளன்,
கண்ணும் கருத்துமாய், மின்னும் கதிரவனின் கீழ்,
பண்ணையை செம்மையாக நடத்தினான் !
அறிந்தவளை அறியாதவள் என்று அன்று சித்தரித்தவன்,
அவள் இருந்தும் ஆதரவற்றுக் கிடக்கிறான் !
அப்பச்சி உழைத்துச்சேர்க்க, ஆத்தாள் அருவாக்கி சேமிக்க
அவரைக்காய் பந்தலிலே காய்க்க, ஏலக்காய் அடுப்பங்கரையில் மணக்க
ஆர்பாட்டம் இல்லாமல், அன்யோன்யமாய் வாழ்ந்தனர் அன்புத் தம்பதியர் !
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?
அடிக்க ஓங்கிய திமுக எம்எல்ஏ.. சட்டசபையில் ஆவேசமாக கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்!
தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு: துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமனம்
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: அபார வெற்றி பெற்று இந்தியா சாதனை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!
மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
{{comments.comment}}