- கவிதா உடையப்பன்
உத்தரவு பெறவே, உத்தமரிடமே
உகந்த நேரத்தில், உள்ளார்ந்த வார்த்தைகளை
உதிர்த்திடுவார், அந்த உத்தமி !
கஞ்சப் பாட்டி, பிசுகி வைக்கும்
வெஞ்சனத்தை உண்டபின்
மிஞ்சிக்கிடக்கும் தேங்காய் கீற்றை
நெஞ்சம் மகிழ, கடித்து பசியாற்றினார் மௌனத் தாத்தா !
போதிய சம்பளம் இன்றி விரட்டும்
பொல்லாத மனைவி மிரட்டும்
வேலையாட்களை, சன்மானத்தொடு சமாதானப்படுத்துவார்
வேட்டியை தும்பைப்பூ போல துவைத்துடுத்தும் கணவர் !

கண்ணாலே பேசி, கண்ணாளனை மடக்கியவள்,
கணக்குகள் தப்பி, காலங்கள் கடந்து தனித்து நிற்கிறாரே இன்று !
கண் துணியை பின்னி, தன்னை பொன்னைப்போல் பேணி
மழையைப்போற்றி மண்ணை வணங்கிய,
மணப்பெண்ணின் கரம் பிடித்த மணவாளன்,
கண்ணும் கருத்துமாய், மின்னும் கதிரவனின் கீழ்,
பண்ணையை செம்மையாக நடத்தினான் !
அறிந்தவளை அறியாதவள் என்று அன்று சித்தரித்தவன்,
அவள் இருந்தும் ஆதரவற்றுக் கிடக்கிறான் !
அப்பச்சி உழைத்துச்சேர்க்க, ஆத்தாள் அருவாக்கி சேமிக்க
அவரைக்காய் பந்தலிலே காய்க்க, ஏலக்காய் அடுப்பங்கரையில் மணக்க
ஆர்பாட்டம் இல்லாமல், அன்யோன்யமாய் வாழ்ந்தனர் அன்புத் தம்பதியர் !
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!
இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!
வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!
உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு
தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!
"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!
ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு
{{comments.comment}}