6 மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம்..பிரியாணி கரண்டியால் அடித்து..ராத்திரி நேரத்தில் நடந்த விபரீதம்!

Mar 12, 2024,12:23 PM IST

சென்னை: சென்னை அயனாவரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக, மனைவியை பிரியாணி கரண்டியால் தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.


சென்னை அயனாவரம் வசந்த் கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமர். வயது 37. இவருக்கும் 36 வயதுடைய சையது அலி பாத்திமா என்பவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. கல்யாணம் ஆனது முதலே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை போல அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.




10ம் தேதியும் இருவருக்கும் இடையே இரவு நேரத்தில் சண்டை மூண்டுள்ளது. வாய்த்தகராறாக ஆரம்பித்த சண்டை உச்சத்திற்கு போய் அடிதடியாக மாறியது. கோபமடைந்த உமர், ஆத்திரத்தில் வீட்டில் வைத்திருந்த இரும்பு பிரியாணி கரண்டியை எடுத்து மனைவியை கடுமையாகத் தாக்கி விட்டார்.


இரும்புக் கரண்டி என்பதால் பாத்திமா கடும் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பாத்திமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாத்திமா இன்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.


பாத்திமாவின் தாய் பல்கீஸ் பீவி அயனாவரம் போலீசில் மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தார். அதன் பேரில் உமர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப் பதிவாகியுள்ளது. 


புருஷன் பொண்டாட்டி சண்டை இயல்புதான்.. அதற்காக இப்படியா கண்மூடித்தனமாக நடந்து கொள்வது.. சண்டை வருதா, வாக்குவாதம் வருதா.. கோபம் வருதா.. யாராவது ஒருவர் அமைதி ஆயிடுங்க.. கோபம் வரும் போகும், ஆத்திரம் வரும் போகும்.. ஆனால் உயிர்.. ??

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்