கணவரிடமிருந்து தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்ற மனைவி.. புதிய வரலாறு படைத்த கேரளா!

Sep 02, 2024,05:34 PM IST

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக, கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரிடமிருந்து தலைமைச் செயலாளர் பொறுப்பை அவரது மனைவி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.


இந்தியாவில் கணவன், மனைவி, தந்தை மகன், தலைமைச் செயலாளர்களாக இருந்த வரலாறு இதற்கு முன்பு இருந்திருக்கலாம். ஆனால் முதல் முறையாக கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரது பொறுப்பை மனைவி ஏற்ற அதிசய நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்துள்ளது.




கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர் வி.வேணு. இவரது மனைவி பெயர் சாரதா முரளீதரன். இருவருமே 90ஸ் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். இருவருக்கும் வயது வித்தியாசம் சில மாதங்கள்தான். வேணு மூத்தவர். வேணு ஆகஸ்ட் 31ம் தேதி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த தலைமைச் செயலாளராக அவரது மனைவி சாரதா முரளீதரன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்தார்.


இதையடுத்து  ஆகஸ்ட் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேணுவைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக சாரதா பதவியேற்றுக் கொண்டார்.  இந்த சம்பவம் கேரள மாநில அரசுத்துறை வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் கூட தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரிடமிருந்து அவரது மனைவி பொறுப்பை பெற்றுக் கொண்டுள்ளார்.  புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.




வெள்ளிக்கிழமை நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பினராயி விஜயன், சாரதா முரளீதரன் மற்றும் வேணு ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசினார். 


இதுகுறித்து சாரதா முரளீதரன் கூறுகையில், எனக்கு இன்னும் எட்டு மாதங்கள் சர்வீஸ் உள்ளது. அவர் ஓய்வு பெற்று விட்டார். அவர் இல்லாமல், எட்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டுமே என்பதே மலைப்பாக உள்ளது.  இருவரும் கடந்த 34 வருடமாக இணைந்தே பணியாற்றி வந்தோம் என்று கூறியுள்ளார் சாரதா.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

news

பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

அதிகம் பார்க்கும் செய்திகள்