திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக, கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரிடமிருந்து தலைமைச் செயலாளர் பொறுப்பை அவரது மனைவி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்தியாவில் கணவன், மனைவி, தந்தை மகன், தலைமைச் செயலாளர்களாக இருந்த வரலாறு இதற்கு முன்பு இருந்திருக்கலாம். ஆனால் முதல் முறையாக கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரது பொறுப்பை மனைவி ஏற்ற அதிசய நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர் வி.வேணு. இவரது மனைவி பெயர் சாரதா முரளீதரன். இருவருமே 90ஸ் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். இருவருக்கும் வயது வித்தியாசம் சில மாதங்கள்தான். வேணு மூத்தவர். வேணு ஆகஸ்ட் 31ம் தேதி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த தலைமைச் செயலாளராக அவரது மனைவி சாரதா முரளீதரன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்தார்.
இதையடுத்து ஆகஸ்ட் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேணுவைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக சாரதா பதவியேற்றுக் கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநில அரசுத்துறை வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் கூட தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரிடமிருந்து அவரது மனைவி பொறுப்பை பெற்றுக் கொண்டுள்ளார். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பினராயி விஜயன், சாரதா முரளீதரன் மற்றும் வேணு ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசினார்.
இதுகுறித்து சாரதா முரளீதரன் கூறுகையில், எனக்கு இன்னும் எட்டு மாதங்கள் சர்வீஸ் உள்ளது. அவர் ஓய்வு பெற்று விட்டார். அவர் இல்லாமல், எட்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டுமே என்பதே மலைப்பாக உள்ளது. இருவரும் கடந்த 34 வருடமாக இணைந்தே பணியாற்றி வந்தோம் என்று கூறியுள்ளார் சாரதா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}