கணவரிடமிருந்து தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்ற மனைவி.. புதிய வரலாறு படைத்த கேரளா!

Sep 02, 2024,05:34 PM IST

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே முதல் முறையாக, கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரிடமிருந்து தலைமைச் செயலாளர் பொறுப்பை அவரது மனைவி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.


இந்தியாவில் கணவன், மனைவி, தந்தை மகன், தலைமைச் செயலாளர்களாக இருந்த வரலாறு இதற்கு முன்பு இருந்திருக்கலாம். ஆனால் முதல் முறையாக கணவர் ஓய்வு பெற்ற நிலையில் அவரது பொறுப்பை மனைவி ஏற்ற அதிசய நிகழ்வு கேரளாவில் நிகழ்ந்துள்ளது.




கேரள மாநில தலைமைச் செயலாளராக இருந்தவர் வி.வேணு. இவரது மனைவி பெயர் சாரதா முரளீதரன். இருவருமே 90ஸ் பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். இருவருக்கும் வயது வித்தியாசம் சில மாதங்கள்தான். வேணு மூத்தவர். வேணு ஆகஸ்ட் 31ம் தேதி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அடுத்த தலைமைச் செயலாளராக அவரது மனைவி சாரதா முரளீதரன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு அவர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து வந்தார்.


இதையடுத்து  ஆகஸ்ட் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற வேணுவைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக சாரதா பதவியேற்றுக் கொண்டார்.  இந்த சம்பவம் கேரள மாநில அரசுத்துறை வட்டாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் கூட தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளரிடமிருந்து அவரது மனைவி பொறுப்பை பெற்றுக் கொண்டுள்ளார்.  புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.




வெள்ளிக்கிழமை நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பினராயி விஜயன், சாரதா முரளீதரன் மற்றும் வேணு ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசினார். 


இதுகுறித்து சாரதா முரளீதரன் கூறுகையில், எனக்கு இன்னும் எட்டு மாதங்கள் சர்வீஸ் உள்ளது. அவர் ஓய்வு பெற்று விட்டார். அவர் இல்லாமல், எட்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டுமே என்பதே மலைப்பாக உள்ளது.  இருவரும் கடந்த 34 வருடமாக இணைந்தே பணியாற்றி வந்தோம் என்று கூறியுள்ளார் சாரதா.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்