ஹைதராபாத்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
இந்தக் கட்டடங்கள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டுக்கு ஜேசிபி இயந்திரங்கள் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த ஹைதராபாத் நகரமானது, தெலங்கானா மாநிலத் தலைநகராக இருந்தாலும் கூட இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல், சந்திரபாபு நாயுடுவின் தூண்டுதலின் பேரில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதைச் செய்திருப்பதாக ஜெகன் மோகன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
ஹைதராபாத் நகரின் லோட்டஸ் பான்ட் பகுதியில் ஜெகன் மோகன் ரெட்டி வீடு உள்ளது. இந்த வீட்டின் முன்புறம் சில கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முதல்வரின் பாதுகாப்பு ஊழியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டவையாகும். அதாவது ஜெகன் மோகன் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டவை. ஆனால் இவை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன, சட்ட விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என்று தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இருப்பினும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தவரை இதுகுறித்து ஹைதராபாத் மாநகராட்சி கண்டு கொள்ளாமல் இருந்தது. தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழந்துள்ள நிலையில் இன்று ஜேசிபி இயந்திரங்களோடு வந்து இந்த கட்டடங்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளி விட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}