சென்னை: தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
ஒருபக்கம் ரஜினிகாந்த், இன்னொரு பக்கம் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவின் தூண்களாக உருவெடுத்துக் கொண்டிருந்தபோது நடுவே தனக்கென ஒரு தனிப் பாதையை கஷ்டப்பட்டுப் போராடி போட்டுக் கொண்டு அதில் ஜம்மென்று பயணிக்க ஆரம்பித்து உச்சம் தொட்டவர் விஜயகாந்த்.
ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனையே மிஞ்சும் அளவுக்கு அவரது உயரம் இருந்தது. ஒரே ஆண்டில் 18 படங்கள் நடித்து அனைவரையும் மலைக்க வைத்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தின் மரணத்தால் இந்த இரு பெரும் நடிகர்களும் உடைந்து போயுள்ளனர். ரஜினிகாந்த் வார்த்தையில் சொல்வதானால், விஜயகாந்த்தின் அன்புக்கு அடிமையானவர்களில் இவர்களும் இருவர்.
காலையில் ரஜினிகாந்த் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், தற்போது கமல்ஹாசனும் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், உழைப்பு, எளிமை, பணிவு பெருந்தன்மை என அனைத்து வார்த்தைகளும் சகோதரர் விஜயகாந்த்துக்குத்தான் பொருந்தும்.
ஆரம்பத்தில் நட்சத்திர அந்தஸ்து இல்லாத போது நான் பார்த்தபோது எப்படி அவர் என்னிடம் பழகினாரோ, அதேபோலத்தான் அந்தஸ்து வந்த பிறகும் கூட என்னிடம் பழகினார்.
இவரிடம் எந்த அளவுக்கு பணிவு இருக்கோ அதே அளவுக்கு அவரிடம் நியாயமான கோபமும் இருக்கும். அதனால்தான் அவர் பொதுப் பணிக்கு வந்தாரோ என்னவோ. அவரது கோபத்துக்கு நான் பெரிய ரசிகன்.
இவர் போன்ற நேர்மையாளர்களை இழந்திருப்பது வருத்தம். இவரது நிழலில் இன்னும் பலர் உருவாகியிருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நல்ல நண்பருக்கு விடை கொடுத்துச் செல்கிறேன் என்றார் கமல்ஹாசன்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}