சென்னை: இயக்குநரும், நடிகருமான எல்.வி.சுரேஷ் தான் தற்கொலை செய்யப் போவதாக கூறி வீடியோ போட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார். அவரது வீடியோ திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை தந்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் நடிகர்களை விட தோல்வியை தழுவி நொடித்துப் போனவர்கள் ஏராளம். வென்றவர்களை விட தோற்றவர்களே அதிகம்.
பூ போன்ற காதல் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தவர் எல்.வி.சுரேஷ். இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் சரியாக வராத காரணத்தினால், தான் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், ரசிகர்கள் வராவிட்டால் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் வீடியோ போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமுறிக் குமுறி அவர் அழுதபடி போட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. இந்த படத்த முடிச்சு சென்சார் சட்டிவிகேட் வாங்க 5 லட்ச ரூபா கடன் வாங்கியிருந்தேன். கடன் பிரச்சனை எனக்கு ரொம்ப இருக்கு. இந்த படத்தை நம்பி தானே இருந்தேன். ஆனா ஒரு 20 ரூபாய் டிக்கெட் கூட வர மாட்டேங்குது. இப்படியே போன நா கண்டிப்பா உயிர் வாழ முடியாது.
எனக்கு நிறைய பேர் கடன் கொடுத்திருக்காங்க அவங்களுக்கு எல்லாம் நன்றி. நாளைக்கு நா கண்டிப்பா உயிரோட இருக்கமாட்டேன். நா சாகுறதுக்கு முன்னாடி இந்த நியூசை சானல்ல போட்டிங்கன்னா எப்படியாவது 100 பேர் இந்த படத்த பாக்க வருவாங்க. அப்பத்தான் பிரச்சினை கொஞ்சமாச்சும் தீரும்.
போடுவீங்கனு நம்புறேன். அப்படி இல்லாட்டி செத்ததுக்கு அப்புறம் போடுங்க. சாரி என்னால நிறைய பேர கஷ்டப்படுத்திட்டேன். இனிமே யாரும் சொந்தமா படம் எடுக்காதீங்க. பணம் நிறையா இருந்தா எடுங்க என்று அழுது கொண்டே கூறியுள்ளளார்.
தற்பொழுது, சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலை இதுவாக உள்ளது எனவும் இதனால் திரைத்துறையும் ரசிகர்களும் சிறுபட்ஜெட் படங்களைப் புறக்கணிக்காமல் ஆதரவு தர வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. கடன் தொல்லை, படம் சரியாக போகவில்லை என்பதற்காக தற்கொலை என்பதெல்லாம் மிக மிக தவறான முடிவு.. சுரேஷைத் தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}