சிகாகோ : அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சார களம் விறுவிறுப்படைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரீஸ் குறித்து முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சி வேட்பாளருமான டிரம்ப் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சமயத்தில் கமலா ஹாரீஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போட்டுள்ள பதிவு அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தாய் மற்றும் தங்கையுடன் இருக்கும் தன்னுடைய சிறு வயது போட்டோவை பகிர்ந்துள்ள கமலா ஹாரீஸ், நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய அம்மா சொந்தமாக வீடு வாங்குவதற்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணத்தை சேமித்து வைத்தார். நான் டீன் ஏஜில் இருக்கும் போது எங்களின் வீட்டை அவர் வாங்கினார். அதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் போது மெக்டெனால்டில், பணம் சம்பாதிப்பதற்காக பகுதி நேரமாக வேலை பார்த்தேன். அதனால் வாழ்வதற்காக அமெரிக்காவில் செலவிடப்படும் தொகை எவ்வளவு அதிகரித்துள்ளது என எனக்கு தெரியும்.
விலைவாசி உயர்வால் வாழ்வதற்கு அமெரிக்கர்கள் எவ்வளவு போராட்டங்களை சிரமங்களை சந்தித்து வருகிறார்கள் என்பது எனக்கு தெரியும். நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதார பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் தந்து, விலைவாசியை குறைப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் தன்னுடைய சிறு வயது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து இப்படி ஒரு போஸ்ட் போட்டுள்ளது அமெரிக்க மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரே போஸ்டால் கமலா ஹாரிசின் செல்வாக்கு அதிகரிக்க துவங்கி உள்ளது. மறுபக்கம், கமலா ஹாரிஸை தரம் தாழ்ந்து டிரம்ப் விமர்சித்து வருவது அவருக்கு பின்னடைவையும் ஏற்படுத்தி வருகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}