சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் அடுத்து யாருடன் இணைய விரும்புகிறேன் என்பது குறித்தும் பேசியுள்ளார் நெல்சன்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க நெல்சன், ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் ஹிட்டடிக்கவே இப்போது ஜெயிலர் 2 எடுக்கவுள்ளனர். இதிலும் ரஜினிகாந்த்துடன் பல முக்கியமான நடிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன் பல தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், ஜெயிலர் 2 படத்தின் திரைக்கதை நன்றாக வந்துள்ளது. அதில் நிறைய வேலை செய்துள்ளோம். அது எங்களுக்குப் பிடித்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்த பிறகே படத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும். ஆனால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

லோகேஷ் கனகராஜை, ரசிகர்கள் "Heisenberg" என்று நினைப்பது பற்றி லோகேஷிடமே இதுபற்றி பேசினேன். அதற்கு லோகேஷ், "எல்லோரும் உங்களைத்தான் Heisenberg என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அந்த Heisenberg இல்லை. ஒருவேளை அது நானாக இருக்கலாம்" என்று கிண்டலாகப் பதிலளித்தார்.
அடுத்து விஜய் சேதுபதி சாருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். விஜய் சேதுபதி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எடுக்கும் எல்லா படத்திலும் அவர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அனிருத் கூட என்னிடம், 'நீங்க கண்டிப்பா விஜய் சேதுபதியை வெச்சு படம் பண்ணனும்' என்று சொல்லியிருக்கார். அது சீக்கிரமே நடக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியும் பங்கேற்றிருந்தார். அவர் பேசும்போது நெல்சனின் ஸ்கிரிப்ட் ரைட்டிங் திறமையைப் பாராட்டினார். அவர் கூறுகையில், நெல்சனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கதாபாத்திரங்களை எழுதும் விதம் தனித்துவமானது. நான் ஜெயிலர் படத்தை 6 முதல் 8 முறை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஜெயிலர் 2 க்காக நான் காத்திருக்கிறேன் என்றார்..
சொல்ல முடியாது, சர்ப்பிரைஸ் எலிமென்ட்டாக ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதியும் கூட இருந்தாலும் இருக்கலாம். அப்படி நடந்தால் பேட்ட படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி, ரஜினி இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}