பிரதமர் பதவியே கொடுத்தாலும் கூட.. பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் சேர மாட்டேன்.. சித்தராமையா

Jan 31, 2023,03:58 PM IST
ராமநகரா, கர்நாடகா: எனக்கு பிரதமர் பதவியே கொடுப்பதாக கூறினாலும் கூட நான் ஆர்எஸ்எஸ்ஸிலோ, பாஜகவிலோ சேர மாட்டேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா.



கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள மாகடியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசும்போது இப்படிக் கூறினார் சித்தராமையா. அவர் பேசுகையில், பாஜகவுக்கும் சரி, மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கும் சரி கொள்கையோ, நல்ல பார்வையோ கிடையாது. பணத்துக்கா, பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். கொள்கை இல்லாத கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பவர்கள் அவர்கள். யாருடன் வேண்டுமானாலும் இணையத் தயாராக இருப்பவர்கள் அவர்கள்.

குடியரசுத் தலைவர் பதவியே தருவதாக இருந்தாலும், பிரதமர் பதவியே தருவதாக கூறினாலும் நான் பாஜகவிலோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிலோ சேர மாட்டேன். எனது பிணம் கூட அவர்களின் அலுவலகத்திற்குப் போகாது.

என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறுகிறது பாஜக. சித்தராமுல்லா கான் என்று என்னைக் கூறுகிறார் பாஜகவின் சிடி ரவி. காந்திஜி உண்மையான இந்து. ஆனால் காந்தியைக் கொன்ற கோட்சேவை அவர்கள் வணங்குகின்றனர்.  அவர்களுக்கு ஏதாவது கண்ணியம் இருக்கிறதா.. இப்படிப்பட்டவர்களுடன் கை கோர்க்கும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா?

நான் முதல்வராக இருந்தபோது அனைவருக்கும் உணவு என்ற பாதுகாப்பைக் கொடுத்தேன். அன்னபாக்யா யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தேன். ஆனால் அதை பாஜக அரசு தொடர்ந்ததா.. இல்லை. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். 7 கிலோ இலவச அரிசி கொடுத்தோம். அதை பாஜக 5 கிலோவாக குறைத்து விட்டது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ இலவச அரிசி கொடுப்போம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித் தொகை வழங்குவோம். ஆனால் ஏதாவது ஒரு சாதனை இவர்களிடம் உள்ளதா.. இல்லை என்றார் சித்தராமையா.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்