பிரதமர் பதவியே கொடுத்தாலும் கூட.. பாஜக, ஆர்எஸ்எஸ்ஸில் சேர மாட்டேன்.. சித்தராமையா

Jan 31, 2023,03:58 PM IST
ராமநகரா, கர்நாடகா: எனக்கு பிரதமர் பதவியே கொடுப்பதாக கூறினாலும் கூட நான் ஆர்எஸ்எஸ்ஸிலோ, பாஜகவிலோ சேர மாட்டேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா.



கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள மாகடியில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசும்போது இப்படிக் கூறினார் சித்தராமையா. அவர் பேசுகையில், பாஜகவுக்கும் சரி, மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கும் சரி கொள்கையோ, நல்ல பார்வையோ கிடையாது. பணத்துக்கா, பதவிக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். கொள்கை இல்லாத கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பவர்கள் அவர்கள். யாருடன் வேண்டுமானாலும் இணையத் தயாராக இருப்பவர்கள் அவர்கள்.

குடியரசுத் தலைவர் பதவியே தருவதாக இருந்தாலும், பிரதமர் பதவியே தருவதாக கூறினாலும் நான் பாஜகவிலோ அல்லது ஆர்எஸ்எஸ்ஸிலோ சேர மாட்டேன். எனது பிணம் கூட அவர்களின் அலுவலகத்திற்குப் போகாது.

என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறுகிறது பாஜக. சித்தராமுல்லா கான் என்று என்னைக் கூறுகிறார் பாஜகவின் சிடி ரவி. காந்திஜி உண்மையான இந்து. ஆனால் காந்தியைக் கொன்ற கோட்சேவை அவர்கள் வணங்குகின்றனர்.  அவர்களுக்கு ஏதாவது கண்ணியம் இருக்கிறதா.. இப்படிப்பட்டவர்களுடன் கை கோர்க்கும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா?

நான் முதல்வராக இருந்தபோது அனைவருக்கும் உணவு என்ற பாதுகாப்பைக் கொடுத்தேன். அன்னபாக்யா யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தேன். ஆனால் அதை பாஜக அரசு தொடர்ந்ததா.. இல்லை. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். 7 கிலோ இலவச அரிசி கொடுத்தோம். அதை பாஜக 5 கிலோவாக குறைத்து விட்டது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ இலவச அரிசி கொடுப்போம். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2000 உதவித் தொகை வழங்குவோம். ஆனால் ஏதாவது ஒரு சாதனை இவர்களிடம் உள்ளதா.. இல்லை என்றார் சித்தராமையா.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்