சென்னை: இட்லி கடை படம் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமடமாக்கப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் படமாக்க இந்த வாரம் பாங்காங் செல்ல இருப்பதாகவும் பட குழு அறிவித்துள்ளது.
தனுஷ் இயக்கி அவரே நடித்த ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார் நடிகர் தனுஷ். இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இதனால் படத்தின் கதைக்களம் அடுத்தடுத்த பாடல்கள் சும்மா பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் தனது அடுத்த படைப்பான இட்லி கடை என்ற படத்தை நடித்து இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ்.
சமீபத்தில் இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தை தனுசுடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாகும். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இட்லி கடை படம் தற்போது தேனி பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக படபிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதுவரை 80 சதவீதம் காட்சிகளை படமாக்கி முடித்து விட்டனர். மீதமுள்ள 20% காட்சிகளை படமாக படக்குழுவினர் இந்த வாரம் பாங்காங் செல்ல திட்டமிட்டுள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.
நயன்தாரா விடுத்த பரபரப்பான அறிக்கை, நெட்பிளிக்சில் வெளியான அவரது டாக்குமெண்டரியில் தனுஷ் ஆட்சேபித்த காட்சிகள் இடம் பெற்றது என ஒரு பக்கம் அனல் பறந்து வந்தாலும் தன்னுடைய படப்பிடிப்பிலும் தனது நோக்கத்திலும் மிகத் தெளிவாக இருக்கும் தனுஷ் தனது வேலைகளை அசராமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}