நயன்தாராவை விடுங்க பாஸ்.. இட்லி கடை டீமுடன்.. பாங்காக் பறக்கப் போகும் தனுஷ்

Nov 19, 2024,06:14 PM IST

சென்னை: இட்லி கடை படம் தற்போது தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமடமாக்கப்பட்டு வரும் நிலையில் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகள் படமாக்க இந்த வாரம் பாங்காங் செல்ல இருப்பதாகவும் பட குழு அறிவித்துள்ளது.


தனுஷ் இயக்கி அவரே நடித்த ராயன்  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டார் நடிகர் தனுஷ். இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 




இதனால் படத்தின் கதைக்களம் அடுத்தடுத்த பாடல்கள் சும்மா பட்டைய கிளப்பும் என ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக  எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் தனது அடுத்த படைப்பான இட்லி கடை என்ற படத்தை நடித்து இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ்.


சமீபத்தில் இப்படம் ஏப்ரல்  பத்தாம் தேதி வெளியாகும் என  அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இப்படத்தை தனுசுடன் இணைந்து ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாகும். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இட்லி கடை படம் தற்போது தேனி பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில்  விறுவிறுப்பாக படபிடிப்பு நடைபெற்று வருகின்றது. இதுவரை 80 சதவீதம் காட்சிகளை படமாக்கி முடித்து விட்டனர். மீதமுள்ள 20% காட்சிகளை படமாக படக்குழுவினர் இந்த வாரம் பாங்காங் செல்ல திட்டமிட்டுள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது.


நயன்தாரா விடுத்த பரபரப்பான அறிக்கை,  நெட்பிளிக்சில் வெளியான அவரது டாக்குமெண்டரியில் தனுஷ் ஆட்சேபித்த காட்சிகள் இடம் பெற்றது என ஒரு பக்கம் அனல் பறந்து வந்தாலும் தன்னுடைய படப்பிடிப்பிலும் தனது நோக்கத்திலும் மிகத் தெளிவாக இருக்கும் தனுஷ் தனது வேலைகளை அசராமல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்