திருவனந்தபுரம்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், மக்கள் விரோத சிஏஏ சட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படும் என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சிஏஏ சட்டம் மட்டுமல்லாது, விவசாய சட்டங்கள் உள்ளிட்ட பாஜக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து சர்ச்சைக்குரிய சட்டங்களும் மறு ஆய்வுக்குட்படுத்தப்படும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் இதுகுறித்துப் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பல சட்டங்களை மறு ஆய்வுக்குட்படுத்துவோம், திருத்துவோம், தேவையில்லாததை நீக்குவோம். பட்டியலில் சிஏஏ முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், கிரிமினல் நடைமுறைச் சட்டம் என எல்லாவற்றையும் மறு ஆய்வுக்கு உட்படுத்துவோம். குறிப்பாக கடைசியாக கொண்டு வரப்பட்ட ஐந்து கிரிமினல் நடைமுறைச் சட்டத்தையும் முழுமையாக நீக்குவோம். அவை அரசியல் சாசனத்திற்கு எதிரானவை. புதிய சட்டங்களைக் கொண்டு வருவோம். 25 சட்டங்களை திருத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தேவைப்பட்டால் மட்டுமே சிறையில் அடைக்கும் முறையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவோம். தேவையில்லாமல், விசாரணையே இல்லாமல், ஒருவரை நீண்ட காலமாக சிறையில் அடைத்திருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். Bail is the rule, jail is the exception என்று சொன்ன கேரள நீதிபதி கிருஷ்ணா சொன்னது போல இந்த சட்டம் கொண்டு வரப்படும். கீழ் நீதிமன்றங்களிலேயே இனிமேல் ஜாமீன் கிடைக்க வகை செய்யப்படும். கைது செய்யப்பட்ட அனைவருமே சிறைக்குப் போகத் தேவையில்லை. ஜாமீனுக்காக சுப்ரீம் கோர்ட் வரை போகத் தேவை இருக்காது. இன்று சிறையில் அடைக்கப்பட்டிருப்போரில் 65 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள்தான், தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல.
விசாரணைக் கைதிகளில் 90 சதவீதம் பேர் ஓபிசிக்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இந்தக் கொடுமையை நீக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும். சிபிஐயோ அல்லது காவல்துறையோ யார் கைது செய்தாலும் சரி, கைது செய்யப்பட்டவர்கள் 15 நாட்களுக்கப் பிறகு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு ப.சிதம்பரம் பதிலளிக்கையில், வயநாடு மக்கள் மீண்டும் ராகுல் காந்தியை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வார்கள். தேர்தல் முடிவு வரும்போது வயநாடு மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்களது அனுதாபங்களை உரத்த குரலில் பதிவு செய்வார்கள் என்றார் ப.சிதம்பரம்.
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்...3 நாட்கள் மட்டுமே அவகாசம்
ஐபிஎல் 2026 : சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
Monday Motivation Short Story: பரிதவிப்பு!
மீரா... டைரியை முழுசா படிச்சியா?.. (நீ மழை - 8)
Chennai Super Kings vs RR: முன்னாள் அணிகளுக்கு எதிராக களம் இறங்கும் சஞ்சு சாம்சன், ஜடேஜா!
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
{{comments.comment}}