நடிகரின் பின்னால் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால் அவர்கள் எனக்குத் தேவையில்லை.. திருமாவளவன்

Mar 17, 2025,10:51 AM IST

சென்னை: ஒரு நடிகர் கட்சி தொடங்கி விட்டார். அந்த நடிகரின்  பின்னால் இளைஞர்கள் ஆட்டு மந்தை போல் திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை என  விஜய்யின் தவெக குறித்து மறைமுகமாக சாடியுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.


விழுப்புரத்தில்  விசிக தேர்தல் அங்கீகார விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,


நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம் ஊடகங்கள் ஒரு செய்தி எழுதுவார்கள். விஜயகாந்த் அவர்கள் கட்சி தொடங்கிய போது விடுதலை சிறுத்தைகள் தான் பலவீனப்படும் என்று கருத்து சொன்னவர்கள் உண்டு. இதனைப் பற்றி விவாதித்தவர்கள் உண்டு. ஆனால் விடுதலை சிறுத்தைகள் தனித்தன்மையோடு அதே வீரத்தோடு இந்த களத்தில் தொடர்ந்து நீடித்து நிற்கிறது என்பதுதான் வரலாறு. அப்போதே நான் சொன்னேன் யார் யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும் அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேதப்படுத்த முடியாது. இதற்கு காரணம் இந்த இயக்கத்தின் களம் முற்றிலும் புதியது. இந்த இயக்கத்தின் கொள்கை கோட்பாடு முற்றிலும் புதியது அந்த அடிப்படையில் தான் திருமாவளவனுக்கும் இயக்கத் தோழர்களுக்கும் இடையே பிணைப்பும் இருக்கிறது. 




சினிமா கவர்ச்சியின் மூலமாக இந்த இளைஞர்களை எவராலும்  திசைமாற்றி விட முடியாது. மடை மாற்றி விட முடியாது என்பதை அப்போதே நான் சொன்னேன். அது உண்மை என்பதை காலம் உணர்த்தி இருக்கிறது. இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு மாபெரும் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அதை சொல்கிறார்கள். நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி விட்டார். இந்த இளைஞர்கள் எல்லாம் அந்தப் பக்கம் ஆட்டுமந்தைகளை போல் திரும்புவார்கள். ஒரு நடிகரின்  பின்னால் இளைஞர்கள் அப்படி திரும்புவார்கள் என்றால் அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட இளைஞர்களை வடிகட்டி வெளியேற்றுவது தான் கட்சிக்கு சிறப்பு. 


புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, பகுத்தறிவு பகலவன் பெரியாரை ஏற்றுக்கொண்டு, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு கோட்பாட்டை வழங்கிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களையும் புரிந்து கொண்டு திருமாவளவனோடு பயணிப்பவர்கள் தான் உண்மையான சிறுத்தைகளாக இருக்க முடியும். அவர்கள்தான் எனக்குத் தேவை. அவர்கள்தான் எப்போதும் என்னோடு பயணிக்க கூடியவர்கள். அவர்களை எந்த கொம்பனாலும் ஈர்க்க முடியாது. திசை மாற்ற முடியாது. மடை மாற்ற முடியாது. 


இங்கே தலைவர்கள் சொன்னதைப் போல அரசியலுக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையிலும், ஒரு பட்டாளத்தை அப்படியே கட்டுக்கோப்பாக வைத்திருக்கக் கூடிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதே எழுச்சி..அதே உணர்ச்சி.. அதே வீரியம்.. அதே வேட்கை.. கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொய்வும் இல்லை.. எந்த வீழ்ச்சியும் இல்லை..சரிவும் இல்லை என பேசியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?

news

வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை

news

CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!

news

பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. கஷ்டப்பட்டு கூட்டணி சேர்ந்தும் பலனில்லையே!

news

போராடும் அதிமுக-திமுக: சீனியர்களின் தோல்விக்கு SIR காரணமா?

news

இட்டுனு வந்து இட்டுனு போறது கஷ்டம்.. தி.நகர் தொகுதியில் திரில் வெற்றியைப் பெற்ற புஸ்ஸி ஆனந்த்!

news

தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!

news

Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!

news

ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்