சென்னை: காலை 10 மணி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நல்ல மழை காத்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பகலிலும், இரவிலும் என மாறி மாறி மழை வெளுத்து வருகிறது. மாலையில் வலுவாக பெய்வதால் அலுவலகம் சென்று திரும்புவோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். அந்த அளவுக்கு மழை பெய்கிறது.

நேற்று இரவு முழுவதும் சென்னையில் விடிய விடிய பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரையிலான காலகட்டத்தில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே அலுவலகம் செல்வோர் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}