சென்னை: தமிழகத்தில் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே போன்று, நாளைய தினம் ஈரோடு, தருமபுரி, கிருஷ்கிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 11ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் அன்றைய தினம் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த 3 நாட்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மழை பகுதிகளுக்கும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வாவிலை மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}