ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

Jun 09, 2025,04:16 PM IST

சென்னை: தமிழகத்தில் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தை பொருத்த வரை இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி,  அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




அதே போன்று,  நாளைய தினம் ஈரோடு, தருமபுரி, கிருஷ்கிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக, 11ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் அன்றைய தினம் கனமழைக்கான எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது.


13,14 மற்றும் 15ம் தேதிகளில்  நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த 3 நாட்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மழை பகுதிகளுக்கும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வாவிலை மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

Happy Mother's Day: அன்னையர் தினம்.. தியாகத்தையும் அன்பையும் கெளரவிக்கும் நாள்!

news

தந்தைக்கு ஓர் மடல்.. என் தந்தையே... என் விந்தையே...!

news

என்றாலும் முடியும்!

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்