சென்னை: தமிழகத்தில் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே போன்று, நாளைய தினம் ஈரோடு, தருமபுரி, கிருஷ்கிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 11ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் அன்றைய தினம் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த 3 நாட்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மழை பகுதிகளுக்கும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வாவிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}