சென்னை: தமிழகத்தில் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 15ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற 13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போன்று, நாளைய தினம் ஈரோடு, தருமபுரி, கிருஷ்கிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 11ம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும் அன்றைய தினம் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
13,14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்த 3 நாட்களிலும் கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மழை பகுதிகளுக்கும் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வாவிலை மையம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}