ஐதராபாத் : இன்போஸிஸில் கிடைத்த வேலையை தக்கவைக்க டிராகன் படம்போல விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்த மென்பொறியாளர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
டிராகன் பட பாணியில் தனது நண்பர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ராபா சாய் பிரசாந்த் இன்போஸிஸில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு வயது 20. கிடைத்த வேலையை தக்கவைக்க டிராகன் படம்போல விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்து ராபா சாய் பிரசாந்த் பணியில் சேர்ந்துள்ளார்.
பணியில் சேர்ந்து 15 நாட்கள் ஆன பின்னர் அவரது திறன் மற்றும் பேச்சில் சில மாற்றங்கள் தென்பட்டுள்ளது. இன்டர்வியூவில் ராபா சாய் பிரசாந்த ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார். ஆனால் பணியின் போது தடுமாற்றத்துடன் பேசியுள்ளார். இவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நிறுவனத்தினர் ஆராய்ந்து பார்த்ததில் விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது.
ஆன்லைன் இன்டர்வியூவில் இருந்தவரும், இவரும் வேறு வேறு நபர்கள் என தெரியவந்ததால் காவல்நிலையத்தில் இன்போஸிஸ் நிறுவனத்தினர் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில், ராபா சாய் பிரசாந்த்தின் மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வேலை பார்த்த 15 நாட்களின் சம்பளத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று ராபா சாய் பிரசாந்த் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தராகண்ட் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளத்தால் மலைச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக., 14ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எங்கள் வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கிறார்கள்.. அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் புலம்பல்
சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!
தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு
மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்
தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?
{{comments.comment}}