ஐதராபாத் : இன்போஸிஸில் கிடைத்த வேலையை தக்கவைக்க டிராகன் படம்போல விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்த மென்பொறியாளர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
டிராகன் பட பாணியில் தனது நண்பர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ராபா சாய் பிரசாந்த் இன்போஸிஸில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு வயது 20. கிடைத்த வேலையை தக்கவைக்க டிராகன் படம்போல விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்து ராபா சாய் பிரசாந்த் பணியில் சேர்ந்துள்ளார்.

பணியில் சேர்ந்து 15 நாட்கள் ஆன பின்னர் அவரது திறன் மற்றும் பேச்சில் சில மாற்றங்கள் தென்பட்டுள்ளது. இன்டர்வியூவில் ராபா சாய் பிரசாந்த ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார். ஆனால் பணியின் போது தடுமாற்றத்துடன் பேசியுள்ளார். இவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நிறுவனத்தினர் ஆராய்ந்து பார்த்ததில் விர்ச்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது.
ஆன்லைன் இன்டர்வியூவில் இருந்தவரும், இவரும் வேறு வேறு நபர்கள் என தெரியவந்ததால் காவல்நிலையத்தில் இன்போஸிஸ் நிறுவனத்தினர் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில், ராபா சாய் பிரசாந்த்தின் மீது 2 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வேலை பார்த்த 15 நாட்களின் சம்பளத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று ராபா சாய் பிரசாந்த் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்
{{comments.comment}}