குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில், பேருந்து லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம் கோலக்காட் மாவட்டம் டெர்கான் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து, டின்சுகியா அருகே உள்ள திலிங்ககோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே ஒரு லாரி வந்தது.
திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது மோதியது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கயது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து லாரி மோதிக்கொண்ட விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}