குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில், பேருந்து லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலம் கோலக்காட் மாவட்டம் டெர்கான் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து, டின்சுகியா அருகே உள்ள திலிங்ககோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே ஒரு லாரி வந்தது.
திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது மோதியது. இதில் பஸ் அப்பளம் போல் நொறுங்கயது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து லாரி மோதிக்கொண்ட விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அமைச்சரின் பிரஸ்மீட்டில் பெண்களுக்கு அனுமதி இல்லை.. கிளம்பிய சர்ச்சை!
என்னாது நோபல் அமைதிப் பரிசு லீக் ஆய்ருச்சா.. சூதாட்டக் கும்பல் அட்டகாசம்.. அதிர்ச்சியில் நார்வே
அனல் பறக்கும் மாதம்பட்டி விவகாரம்.. பாலைவன பூமியில் ஓய்வெடுக்கும் மனைவி ஸ்ருதி
பேசாம ஹனிமூனையும் கூட நீங்களே முடிவு செஞ்சு சொல்லிடுங்களேன்.. திரிஷா நச் பதிலடி!
அக்.,17ல் கரூர் செல்லும் விஜய்?... கல்யாண மண்டபத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க திட்டம்!
ஐயா அப்பத்தாவே ஆணிவேர் !
பெரியார் வழியைக் காட்டிய தந்தை.. அடுத்தடுத்து படித்து.. அசர வைக்கும் பேராசிரியை மஞ்சரி!
அம்மாவுக்குள் இருந்த ஏக்கம்.. அவருக்கும் சேர்த்து வட்டியும் முதலுமாக மேடையில் கலக்கும் தன்யா!
பெண்கள் படிக்கணும்.. கத்துக்கிட்டே இருக்கணும்.. உதாரண நாயகியாக திகழும் டாக்டர் உஷா தண்டாயுதபாணி!
{{comments.comment}}