அஸ்ஸாமில் அதிகாலையில் பயங்கரம்..  பேருந்து- லாரி மோதிக்கொண்டதில்.. 14 பேர் உயிரிழப்பு!

Jan 03, 2024,12:26 PM IST

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில், பேருந்து லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.


அசாம் மாநிலம் கோலக்காட் மாவட்டம் டெர்கான் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.  புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து, டின்சுகியா அருகே உள்ள திலிங்ககோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே ஒரு லாரி வந்தது.


திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது மோதியது. இதில் பஸ்  அப்பளம் போல் நொறுங்கயது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.




இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து லாரி மோதிக்கொண்ட விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Cooking Time: சூப்பரான சோளம் கம்பு சாதம்.. கண்ணுக்கு நல்லது.. மலச்சிக்கல் மாயமாகும்!

news

வங்க கடலில் வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

news

கத்திரி வெயிலுக்கு இன்றுடன் என்டுகார்டு.. வெயில் படிப்படியாக குறையும்..!

news

நாடே எதிர்பார்த்த.. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில்.. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு..!

news

அசுத்தமான குடிநீரால்... தவிக்கும் தென்மாவட்டங்கள்... பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பள்ளி திறக்கப்பட்ட அன்றே மாணவர்களுக்கு நோட் புத்தகம் வழங்க.. அமைச்சர் அன்பில் மகேஷ்‌ அறிவுறுத்தல்!

news

தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல.. அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சியே... விஜய் ஆவேசம்!

news

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்.. வானிலை மையம்

news

சரியான எடைகளில் பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்ய‌.. ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை..!

அதிகம் பார்க்கும் செய்திகள்