Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Mar 20, 2025,06:57 PM IST

சென்னை:   சென்னை உட்பட 8 போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. 


திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக  குழந்தைகள், மாணவர்கள் பெண்களுக்கான பல திட்டங்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. அதே சமயத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு திமுக பல்வேறு யுத்திகளையும் கையாண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, 2025 -26 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தது.




அதன்படி சமீபத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி பெண்களை குஷிப்படுத்தி உள்ளது. அதேபோல் தற்போது தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.


அதாவது தமிழ்நாட்டில் உள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு மொத்தம் 3,274 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 364 விரைவு போக்குவரத்து கழகத்தில் (SETC)318,   காலி பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. அதேபோல் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 322, கும்பகோணத்தில் போக்குவரத்து கழகத்தில் 756,  சேலம் 506,கோயம்புத்தூரில் 344, மதுரையில் 302, திருநெல்வேலியில் 362, என மொத்தம் 3274 ஓட்டுநர், நடத்தினர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 


அதாவது நாளை  (21.3.2025)மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2025 இன் படி 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உயரம் 160 சென்டிமீட்டர் குறைந்தபட்சமாக 50 கிலோ எடையும் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்