- க.யாஸ்மின் சிராஜூதீன்
நீ ஓர் தொடர் கதையா...!!!
வாழ்க்கையை ஆக்கிரமித்தாயே
உயிருள்ள வரை....!!!
அன்பு நண்பனா...!!!
உன்னைப்பிரியாமல் இருக்கச் செய்கிறாயே....!!!
அமுதச் சுரபியா...!!!
அள்ள அள்ள குறையவில்லையே...!!!
நீ என்ன ஆசையா....!!!!
அடுத்தடுத்து வருகிறாயே....!!!
நீயும் ஆசையும் போட்ட ஒப்பந்தமா..!!!
எங்களை பம்பரமாய்சுழற்றுகிறாயே.!
நீ என்ன புதையலா...!!!
தோண்டிக்கொண்டே இருக்க வைக்கிறாயே....!!!!
நீ என்ன வேரா...!!!!!
ஊடுருவிக்கொண்டே இருக்கிறாயே..!
நீ என்ன ரகசியமா...!!!

கண்ணாமூச்சி ஆடுகிறாயே...!!
நீ என்ன நண்பனா !!பகைவனா !!! வீரனா !!!வெற்றியா !!
தோல்வியா!!வேகமா!!! கல்வியா!!செல்வமா!! தென்றலா!! புயலா!!
அறிவா!!ஆற்றலா!! பலமா!!பலவீனமா!!சொல்லா!!செயலா!!....
ஆஆஆ..கண்டுபிடித்தேன்...
வாழ்க்கையா....!!!
ஏன் இவ்வளவு ரகசியம்..!!!
ஏன் இத்தனை தேடல்....!!!
வாழ்க்கை வாழ்வதற்கே....
என்பதை உணர்த்துவதற்கா ....!!!
உணர்ந்தேன் தெளிந்தேன்...!!!
நேரம் கனிந்தால் காய் கனியாவதுபோல்...
தேடல் விடையாகும் மீண்டும்
விடுகதையாகும்...!!!
வாழ்க்கை சுழலும் வரை...
தேடலும் சுழலும்தான்...!!!
நம் வாழ்க்கை இன்பமாகும்...!!!
வாழ்க்கையை தேடலில் மறைத்து
வைத்தான் இறைவன் ...
நம் வாழ்க்கையை நாமே வடிவமைக்கவே...சிறந்ததை
தேர்ந்தெடுப்போம் தேடல் தொடரும்....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
அது துணியல்ல... உன் நம்பிக்கையின் ஆகாயம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
ராகுல் காந்தி சென்னை வருகை: காங்கிரஸ் உற்சாக வரவேற்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்
150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய அரிய புத்தகம்,பட் அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
{{comments.comment}}