- க.யாஸ்மின் சிராஜீதீன்
பெண்ணின்றி அமையாது உலகு
அவளின்றி மகிழாது வீடு...
பேதை முதல் பேரிளம்பெண் வரை ஏழு பருவங்கள் கொண்டாய்...
உலகை ஏற்றி விடும் ஏணியாய் பிறந்தாய்...
பெண்கள் தடம்பதியாத துறைகள் இல்லை
பெண்ணடிமை வீடுகள் சிறப்படைவதுமில்லை....
அடுப்பூதிய மங்கை இன்று
ஆராய்ச்சிக்கு அன்னை....

நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்டபார்வையும்
சிந்தனையில்
தெளிவும் உனக்கேசொந்தம்...
உன் பாசத்திற்கு விலையில்லை வீரத்திற்கு குறைவில்லை.....
ஏடுதூக்கிப்
படித்தாய்
வரலாற்று ஏட்டில் தடம் பதித்தாய்....
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனைப் பெண்கள் ஏராளம்
நாமும் அதில் இருப்போம் என்று உறுதிகொள் வீர மகளே...
சொல்லில் சொல்லி அடக்கி விட முடியாது உந்தன் பெருமையை....
சாதனை படைக்க எழுந்து வா வீர மகளே...
சரித்திரம் படைக்கலாம் வெற்றி நடை போட்டு ஒளிவீசிடலாம் பாரினிலே...
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
அது துணியல்ல... உன் நம்பிக்கையின் ஆகாயம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
ராகுல் காந்தி சென்னை வருகை: காங்கிரஸ் உற்சாக வரவேற்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்
150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய அரிய புத்தகம்,பட் அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு
{{comments.comment}}