ஹைதராபாத்: உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக முறை கேப்டனாக இருந்த பெருமை முகம்மது அஸாருதீனுக்கு மட்டுமே உள்ளது. இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான கபில் தேவுக்குக் கூட அந்தப் பெருமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1975 மற்றும் 1979 ஆகிய இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பெரிய சக்தியாக இல்லை. ஆனால் 1983ம் ஆண்டுதான் தனது பலத்தை முழுமையாக வெளி உலகுகக்கு காட்டியது. எப்புர்ரா.. என்று பலரும் வியந்து பார்த்தது அந்த உலகக் கோப்பைத் தொடரில்தான். அந்த மாஜிக்கை நிகழ்த்திக் காட்டிது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 8 இந்திய கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்திச் சென்றுள்ளனர். அதுகுறித்த ஒரு பார்வை.
1975 மற்றும் 1979ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களுக்கு கேப்டனாக இருந்தவர் ஸ்பின் புயல் ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன். இந்த இரு தொடர்களிலும் இந்தியா பெரிதாக சோபிக்கவில்லை.
1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் கபில்தேவ் கேப்டனாக இருந்தார். இந்த தொடரில்தான் இந்தியா அதிரடியாக கோப்பையைக் கைப்பற்றி கிரிக்கெட் உலகையும், அப்போதைய ஜாம்பவானான மேற்கு இந்தியத் தீவுகளையும் அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரிலும் கபில்தேவே கேப்டனாக இருந்தார். 1987ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு வந்து சேர்ந்தார் முகம்மது அஸாருதீன். இந்திய அணிக்கு அதிக அளவிலான வெற்றிகளைத் தேடிக் கொடுத்த அட்டகாசமான கேப்டன் அஸாருதீன்தான். இவர் 1992, 1996 மற்றும் 1999 ஆகிய மூன்று உலகக் கோப்பைத் தொடர்களுக்கு கேப்டனாக இருந்தவர். ஆனால் இவரது காலத்தில் ஒருமுறை கூட இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.
2003ம் ஆண்டு கங்குலி கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இந்திய அணி அதிரடியாக ஆடி இறுதிப் போட்டி வரை முன்னேறிச் சென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் சச்சின் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் சொதப்பியதால் பரிதாபமான தோல்வியே நமக்குக் கிடைத்தது.
2007 தொடரில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்தார். இந்தத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா தவறி விட்டது.
டிராவிடுக்குப் பிறகு கேப்டன் ஆனார் எம்.எஸ். தோனி. இவரது காலத்தில்தான் இந்திய அணி ஏகப்பட்ட வெற்றிகளைக் குவித்தது. தோனி கேப்டனாக இருந்த காலம் இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அனைத்து ஐசிசி சாம்பியன் பட்டங்களையும் வென்று அசகாய சாதனை படைத்தது தோனி அணி. இதன் உச்சமாக 2011ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் ஆகி அசத்தியது. இது இந்தியாவுக்குக் கிடைத்த 2வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும். 2015 தொடரிலும் தோனியே கேப்டனாக இருந்தார்.
2019ம் ஆண்டு நடந்த தொடரில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். வீரராக ஜொலித்த அளவுக்கு கேப்டனாக விராட் கோலியால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
தற்போதைய தொடரில் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு அதிர்ஷ்டமும், அருமையான அணியும் பக்க பலமாக உள்ளனர். கபில் தேவ், தோனிக்குக் கிடைத்த பெருமை.. ரோஹித் சர்மாவுக்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
@@இந்த மாதிரி நேரத்துல "விராட் கோலிகள்" சொல்ற வார்த்தை என்ன தெரியுமா.. "பார்த்துக்கலாம்"!
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}