சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளி அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறையினை பயன்படுத்தி, வெளியூர்களில் பணி புரிந்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதனால், ரயில், பேருந்துகளில் மட்டும் கூட்டம் அதிகரிக்கவில்லை. விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கூடியுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் போட்டி போட்டு கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். பேருந்து, ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிக நேரம் ஆகும் என்பதால் பயணிகள் பலர் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு வருகின்றனர். இதனால், விமான டிக்கெட்டின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி,கோவை, சேலத்திற்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதினால், விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் டிக்கெட் விலை தற்பொழுது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
சென்னை டூ தூத்துக்குடிக்கு ரூ.4,301 ஆக இருந்த விமான கட்டணம் இன்றும், நாளையும் ரூ.10,796 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை டூ மதுரைக்கு ரூ.4063ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் ரூ.11,716 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை டூ திருச்சிக்கு ரூ.7192 ஆகவும், சென்னை டூ கோவை விமான கட்டணம் ரூ.5,349 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது மட்டும் இன்றி சென்னையில் இருந்து டில்லி, மும்பை, ஆமதாபாத் செல்லும் விமான டிக்கெட்டுகளின் விலையும் தற்பொழுது கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பேசாம மாட்டு வண்டியை எடுத்துட்டு அப்படியே ஜாலியா ஊரெல்லாம் வேடிக்கை பார்த்துட்டே போகலாம் போலயே!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}