- கவிஞர் சு. சண்முகம் (சொகோ), புதுப்பேட்டை
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
சுகமாய் சுற்றித் திரிவோரே!
இன்று மட்டுமாயின் சற்று
இன்னலில் அடிபட்டு மாண்டோரை
ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
ஓராயிரம் மறியல்கள் போராட்டங்கள்
அருகிலுள்ள முதியோர் என்பது
அகவை கடந்தோரை இன்றேனும்
சந்தித்து அனுபவித்த இடர்களை
சற்றேனும் செவிமடுப்பீர்! அறிவீர்!
வாய்கிழிய பேசும் வாலிபர்களே!
வாய்மூடி ஊமையாக்கப்பட்ட முன்னோர்
அணுகியே அனுசரணையாய் ஓரிரு
அசைபோடு நினைவில் இளைப்பாருங்கள்
சட்டம்பேசும் சண்டியரே!
சுதந்திரச் சந்தேகங்களை நூலகத்தில் தேடிடுவீர்!
அணைத்தே அன்றாடம் உறங்கிடும்
அலைபேசியிலேனும் அறிந்திட விழைவீர்!
இளைஞர், இளைஞிகளே! மகிழ்வுருநாளின்று
இந்நாளை தொலைத்திடாது இருக்கவே!
ஆழ்ந்தறிவீர்! நற்செயல் செய்வீர்!
ஆனந்தவாழ்வுக்கு வழிவகை தேடுவீர்!
அடிமைச்சங்கிலி உடைத்தெறிய உத்வேகமாய்
ஆங்கிலேயர் அதிர்ந்திடவே! பயந்திடவே!
தோள் நிமிர்த்தோரை இந்நாளில்
தொழுது வணங்கியே போற்றிடுவோம்.
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
{{comments.comment}}