சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

Aug 15, 2025,03:16 PM IST

- கவிஞர் சு. சண்முகம் (சொகோ), புதுப்பேட்டை


சும்மா கிடைத்ததா சுதந்திரம்? 

சுகமாய் சுற்றித் திரிவோரே! 

இன்று மட்டுமாயின் சற்று  

இன்னலில் அடிபட்டு மாண்டோரை  

ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக! 




ஓராயிரம் மறியல்கள் போராட்டங்கள்  

அருகிலுள்ள முதியோர் என்பது  

அகவை கடந்தோரை இன்றேனும்  

சந்தித்து அனுபவித்த இடர்களை  

சற்றேனும் செவிமடுப்பீர்! அறிவீர்!  


வாய்கிழிய பேசும் வாலிபர்களே!  

வாய்மூடி ஊமையாக்கப்பட்ட முன்னோர்  

அணுகியே அனுசரணையாய் ஓரிரு  

அசைபோடு நினைவில் இளைப்பாருங்கள்  


சட்டம்பேசும் சண்டியரே! 

சுதந்திரச்  சந்தேகங்களை நூலகத்தில் தேடிடுவீர்!  

அணைத்தே அன்றாடம் உறங்கிடும்  

அலைபேசியிலேனும் அறிந்திட விழைவீர்!  


இளைஞர், இளைஞிகளே! மகிழ்வுருநாளின்று  

இந்நாளை தொலைத்திடாது இருக்கவே!  

ஆழ்ந்தறிவீர்! நற்செயல் செய்வீர்!  

ஆனந்தவாழ்வுக்கு வழிவகை தேடுவீர்!  


அடிமைச்சங்கிலி உடைத்தெறிய உத்வேகமாய்  

ஆங்கிலேயர் அதிர்ந்திடவே! பயந்திடவே!  

தோள் நிமிர்த்தோரை  இந்நாளில்  

தொழுது வணங்கியே போற்றிடுவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

news

தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!

news

அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?

news

தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்

news

Girls' Education.. பெண் கல்வி.. சமூகத்தின் முக்கியத் தேவை.. டி. பிருந்தாவின் ஆய்வுக் கட்டுரை

news

Ratha yatra when god becomes human.. பூரி ரத யாத்திரையின் மகிமை!

news

Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

அதிகம் பார்க்கும் செய்திகள்