- கவிஞர் சு. சண்முகம் (சொகோ), புதுப்பேட்டை
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
சுகமாய் சுற்றித் திரிவோரே!
இன்று மட்டுமாயின் சற்று
இன்னலில் அடிபட்டு மாண்டோரை
ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

ஓராயிரம் மறியல்கள் போராட்டங்கள்
அருகிலுள்ள முதியோர் என்பது
அகவை கடந்தோரை இன்றேனும்
சந்தித்து அனுபவித்த இடர்களை
சற்றேனும் செவிமடுப்பீர்! அறிவீர்!
வாய்கிழிய பேசும் வாலிபர்களே!
வாய்மூடி ஊமையாக்கப்பட்ட முன்னோர்
அணுகியே அனுசரணையாய் ஓரிரு
அசைபோடு நினைவில் இளைப்பாருங்கள்
சட்டம்பேசும் சண்டியரே!
சுதந்திரச் சந்தேகங்களை நூலகத்தில் தேடிடுவீர்!
அணைத்தே அன்றாடம் உறங்கிடும்
அலைபேசியிலேனும் அறிந்திட விழைவீர்!
இளைஞர், இளைஞிகளே! மகிழ்வுருநாளின்று
இந்நாளை தொலைத்திடாது இருக்கவே!
ஆழ்ந்தறிவீர்! நற்செயல் செய்வீர்!
ஆனந்தவாழ்வுக்கு வழிவகை தேடுவீர்!
அடிமைச்சங்கிலி உடைத்தெறிய உத்வேகமாய்
ஆங்கிலேயர் அதிர்ந்திடவே! பயந்திடவே!
தோள் நிமிர்த்தோரை இந்நாளில்
தொழுது வணங்கியே போற்றிடுவோம்.
எளிமையின் சிகரம் ஆர். நல்லகண்ணு.. ஒரு சகாப்தத்தின் கதை.. செவ்வணக்கம்!
தோழர் நல்ல கண்ணு உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு...முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல்
திமுக - அதிமுக.. பிரிந்து வந்து பிறந்த புதுக் கட்சிகள்.. லேட்டஸ்ட்டாக இணைந்த சசிகலா!
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
நமக்கான வாகனம் இதோ வந்துவிட்டது... இலட்சியத்தை வெல்வோம் - ராமதாஸ் அதிரடி
பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது - முதலமைச்சர் முக ஸ்டாலின்!
கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!
தோழர் நல்லக்கண்ணு!
{{comments.comment}}