சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

Aug 15, 2025,03:16 PM IST

- கவிஞர் சு. சண்முகம் (சொகோ), புதுப்பேட்டை


சும்மா கிடைத்ததா சுதந்திரம்? 

சுகமாய் சுற்றித் திரிவோரே! 

இன்று மட்டுமாயின் சற்று  

இன்னலில் அடிபட்டு மாண்டோரை  

ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக! 




ஓராயிரம் மறியல்கள் போராட்டங்கள்  

அருகிலுள்ள முதியோர் என்பது  

அகவை கடந்தோரை இன்றேனும்  

சந்தித்து அனுபவித்த இடர்களை  

சற்றேனும் செவிமடுப்பீர்! அறிவீர்!  


வாய்கிழிய பேசும் வாலிபர்களே!  

வாய்மூடி ஊமையாக்கப்பட்ட முன்னோர்  

அணுகியே அனுசரணையாய் ஓரிரு  

அசைபோடு நினைவில் இளைப்பாருங்கள்  


சட்டம்பேசும் சண்டியரே! 

சுதந்திரச்  சந்தேகங்களை நூலகத்தில் தேடிடுவீர்!  

அணைத்தே அன்றாடம் உறங்கிடும்  

அலைபேசியிலேனும் அறிந்திட விழைவீர்!  


இளைஞர், இளைஞிகளே! மகிழ்வுருநாளின்று  

இந்நாளை தொலைத்திடாது இருக்கவே!  

ஆழ்ந்தறிவீர்! நற்செயல் செய்வீர்!  

ஆனந்தவாழ்வுக்கு வழிவகை தேடுவீர்!  


அடிமைச்சங்கிலி உடைத்தெறிய உத்வேகமாய்  

ஆங்கிலேயர் அதிர்ந்திடவே! பயந்திடவே!  

தோள் நிமிர்த்தோரை  இந்நாளில்  

தொழுது வணங்கியே போற்றிடுவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்