தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெயிஹிந்த்.. 76 வது குடியரசு தினம்.. கொண்டாட தயாராகும் இந்தியா

Jan 25, 2025,03:37 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடத் தயாராகி வருகிறது இந்தியா.


1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது. இந்தியாவின் அரசியல் சாசனத்தை நினைவு கூறும் ஒரு தேசிய தினம்தான் இந்த குடியரசு தினம்.


ஆகஸ்ட் 15 1947-ல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறினாலும் ஜனவரி 26 1950 அன்று அரசியல் அமைப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் அது தன்னை இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அறிவித்தது. டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள்தான் ஜனவரி 26 1950.




இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து பூர்ண ஸ்வராஜ் அறிவித்தது அதாவது பூரண விடுதலையை அறிவித்தது. எனவேதான் இந்த தினத்தையே நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.


இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று 76 ஆவது குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருட குடியரசு தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க இந்தோனேசியா குடியரசுத் தலைவர் பிரபோவோ  சுபி யாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.


புதுடெல்லியில் உள்ள கர்த்தவ்ய பாதை என்ற இடத்தில் இதற்கான அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியம் ராணுவ வலிமை இவற்றை உணர்த்தும் விதமாக பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். நமது பாரம்பரியம், பலம் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் கண்டு வியக்கும் நாளாகவும் இது அமையும்.


இந்த ஆண்டு 2025 குடியரசு தினத்தின் கருப்பொருள் தீம் என்னவென்றால  'ஸ்வர்னிம் பாரத் 'Swarnim Bharath - 'விராசத் அவர் விகாஸ்'. ( அதாவது தங்க இந்தியா பாரம்பரியம் மற்றும் மேம்பாடு), இது நம் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் அதன் தொடர்ச்சியான முன்னேற்ற பயணத்தையும் பிரதிபலிக்கிறது.


குடியரசு தினத்தில் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் தேசிய துறை நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சல்யூட் அடித்து மரியாதை செலுத்துவோம். அவர்கள் மட்டுமல்லாமல் நமது வீடுகளிலும் கூட தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தி நமக்காக ரத்தம் சிந்தி விடுதலை வாங்கிக் கொடுத்த தியாகச் செம்மல்களை நினைவு கூருவோம்.


ஜெய்ஹிந்த்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்