"சந்திரன் ஒரு கண்ணில்.. சூரியன் மறு கண்ணில்".. செப். 2ல் சீறிப் பாய்கிறது ஆதித்யா!

Aug 26, 2023,04:33 PM IST
பெங்களூரு: சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக்கியுள்ள இஸ்ரோ, அடுத்து சூரினை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளுக்கு மிகப் பெரிய உற்சாகமாக வந்து சேர்ந்துள்ளது சந்திரயான் 3 திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. பூமி அல்லாத இன்னொரு கிரகத்தில் இந்தியாவின் காலடி சந்திரனில் பட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.



இந்த சாதனையால் உற்சாகமடைந்துள்ள இந்திய விஞ்ஞானிகள் இன்னொரு வான வேடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர். அது தான் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலத் திட்டம். செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.  இது சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும். மேலும் சூரியப் புயல்களையும் இது ஆய்வு செய்து தகவல் அனுப்பும்.

பூமியிலிருந்து 10 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. இதுவரை நாம் சூரிய ஆய்வில் ஈடுபட்டதில்லை. இதுதான் முதல் முறையாகும். சூரியனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதே ஆதித்யா விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.  சூரியனின் வெளிப்புறத்தில் 7 விதமான பகுதிகலை இந்த விண்கலம் ஆய்வு செய்யும். அதற்கேற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதித்யா விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  இந்தியாவின் முன்னணி  நிறுவனங்கள் பல கை கோர்த்துள்ளன என்பது முக்கியமானது. பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் இதில் முக்கியமானது.  பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மையத்திலிருந்து ஆதித்யா விண்கலமானது, 2 வாரங்களுக்கு முன்பு இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்