"சந்திரன் ஒரு கண்ணில்.. சூரியன் மறு கண்ணில்".. செப். 2ல் சீறிப் பாய்கிறது ஆதித்யா!

Aug 26, 2023,04:33 PM IST
பெங்களூரு: சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக்கியுள்ள இஸ்ரோ, அடுத்து சூரினை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது.

இந்தியாவின் விண்வெளி ஆய்வுகளுக்கு மிகப் பெரிய உற்சாகமாக வந்து சேர்ந்துள்ளது சந்திரயான் 3 திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. பூமி அல்லாத இன்னொரு கிரகத்தில் இந்தியாவின் காலடி சந்திரனில் பட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும்.



இந்த சாதனையால் உற்சாகமடைந்துள்ள இந்திய விஞ்ஞானிகள் இன்னொரு வான வேடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர். அது தான் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலத் திட்டம். செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.  இது சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்யும். மேலும் சூரியப் புயல்களையும் இது ஆய்வு செய்து தகவல் அனுப்பும்.

பூமியிலிருந்து 10 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. இதுவரை நாம் சூரிய ஆய்வில் ஈடுபட்டதில்லை. இதுதான் முதல் முறையாகும். சூரியனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதே ஆதித்யா விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.  சூரியனின் வெளிப்புறத்தில் 7 விதமான பகுதிகலை இந்த விண்கலம் ஆய்வு செய்யும். அதற்கேற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதித்யா விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்  இந்தியாவின் முன்னணி  நிறுவனங்கள் பல கை கோர்த்துள்ளன என்பது முக்கியமானது. பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் இதில் முக்கியமானது.  பெங்களூரு யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மையத்திலிருந்து ஆதித்யா விண்கலமானது, 2 வாரங்களுக்கு முன்பு இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்