ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமான வெற்றியை பெற்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே ராஞ்சியில் நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. சுப்மன் கில் மற்றும் ஜுரல் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஆடி இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று விட்டது. முன்னதாக 192 என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய இந்தியாவுக்கு ரோஹித் சர்மாவும், ஜெய்ஸ்வாலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.

கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டார்களான துருவ் ஜூரல் மற்றும் கில் ஆகியோர் அபாரமாக ஆடி அணியை வெற்றிக் கோட்டைத் தொட வைத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 52 ரன்களும், ஜுரல் 39 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பாசிர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்திருந்தது. இந்தியா பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இங்கிலாந்தின் 2வது இன்னிங்ஸில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் புயலாக மாறி பந்து வீசவே அந்த அணி 15 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு சேசிங் ஈஸியானது. இந்தியா தனது சேசிங்கை 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிகரமாக முடித்தது.
துருவ் ஜூரல் மேன் ஆப் தி மேட்ச்

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருது இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரலுக்குக் கிடைத்துள்ளது. இது அவருக்கு 2வது டெஸ்ட் போட்டியாகும். இதில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களைக் குவித்திருந்தார் ஜூரல். 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை எடுத்திருந்தார்.
தனது 2வது டெஸ்ட் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற ஜூரலுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டுள்ளன. அடுத்த எம்.எஸ். தோனி இவர்தான் என்று ஏற்கனவே சுனில் கவாஸ்கரும் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}