இந்தியாவில் போர் பதற்ற சூழல்.. மே 15 வரை விமான நிலையங்கள் மூடல்

May 10, 2025,10:16 AM IST

டெல்லி: இந்தியாவில் போர் பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 15-ம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.



காஷ்மீர் அருகே உள்ள அழகிய பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் அரசை எச்சரிக்கும் விதமாக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் ராணுவம் பதான்கோட், பதம்பூர், ஜம்மு உள்ளிட்ட இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து  இந்திய ராணுவம் அதனை முறியடித்தது. 


அதே சமயத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும் இடைமறிந்து அழித்தது. இதனால் அப்பகுதிகளில் போர்ப்பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இன்று அதிகாலை 5 மணி அளவில் பஞ்சாப் அமிர்தசரத்தில் உள்ள காசா கான்ட் என்கிற இடத்தில் பாகிஸ்தானின் ட்ரோன் கண்டறியப்பட்டு உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.




இதற்கிடையே இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதிரிகளின் சதித் திட்டங்களை ராணுவம் நிச்சயம் முறியடிக்கும் என இந்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த நிலையில் இந்தியாவில் போர் பதற்றம் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் 15-ம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், பதான்கோட்,லே, ஜோத்பூர், பூஜ், முந்த்ரா, ஜன்மகர், ஹிராசர், போர்பந்தர், கேஷோத்,காண்ட்லா, பிகானர், ஹல்வாரா, ஜெய்சால்மர்,

பூந்தர், கிஷன்கர், பாட்டியாலா,சிம்லா, லூதியானா, உள்ளிட்ட 32 விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.


மேலும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும்  கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்