இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி.. நிச்சயம் டெல்லி ஜும்மா மசூதி இல்லை.. வேற எது?

Dec 31, 2022,08:55 PM IST
டெல்லி: இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதி டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் என்று பலரும் கருதுகிறார்கள். ஏன் டெல்லி சுற்றுலாத்துறை இணையதளத்திலேயே கூட அப்படித்தான் உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல.

வரலாற்று அறிஞர்கள் கூற்றுப்படி, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள தாஜ் உல் மஸ்ஜித் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய மசூதியாகும். 

இந்தியாவில் மிக மிக பழமையான பல மசூதிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் டெல்லி ஜும்மா மசூதி. இது 1656ம் ஆண்டு முகலாய மன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும்.  அதேசமயம், போபாலில் உள்ள தாஜ் உல் மஸ்ஜித் மசூதியானது 1868 ம் ஆண்டில் தொடங்கி 1901ம் ஆண்டு வாக்கில் பாதி கட்டி முடிக்கப்பட்டது. இதை கட்டியவர் போபாலை அப்போது ஆண்டு வந்த ராணி ஷாஜகான் பேகம் ஆவார். இவர் போபாலின் மூன்றாவது ராணி ஆவார்.  தாஜ் உல் மஸ்ஜித் என்றால் மசூதிகளின் மகுடம் என்று பொருளாகும். ஷாஜகான் பேகம் மறைவுக்குப் பின்னர் பல வருடம் கழித்து 1971ம் ஆண்டு இந்த மசூதியை முழுமையாக கட்டி முடிக்கும் முயற்சிகள் முஸ்லீம்களால் கையெடுக்கப்பட்டு, 1985ம் ஆண்டுதான் இது முழுமை பெற்றது. 


இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் சோஹைல் ஹஷ்மி கூறுகையில், டெல்லி ஜும்மா மசூதி இந்தியாவின் மிகப் பெரிய மசூதி கிடையாது. மாறாக போபாலில் உள்ள தாஜ் உல் மசூதிதான் மிகப் பெரியது. டெல்லியை விட 33 சதவீதம் பெரிய மசூதியாகும் இது. 

ஜும்மா மசூதியானது அளவில் பெரிது கிடையாது, மாறாக, முகலாய கட்டடக் கலையின் பிரமாண்டத்திற்கு அது மிகச் சிறந்த உதாரணம் என்று கூறலாம்.  இந்த கட்டடத்தின் எழிலைப் பார்த்து பலரும் இதே போல கட்ட ஆர்வம் காட்டினர். லாகூரில் அவுரங்கசீப் கட்டிய பாதாஷி மசூதியும் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றார் அவர்.

அதேசமயம், ஒட்டுமொத்தமாக எது பெரிய மசூதி என்று பார்த்தால் லாகூர் மசூதிதான் உலகிலேயே மிகப் பெரியது என்றும் வரலாற்று நிபுணர்கள் சொல்கிறார்கள். கட்டுமானப் பகுதி மற்றும் திறந்த வெளிப் பகுதி ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்தால் பாதாஷி மசூதிதான் உலகிலேயே மிகப் பெரியது என்பது அவர்களின் கூற்றாகும்.

இருப்பினும் இதுதொடர்பாக எந்த பதிவு செய்யப்பட்ட ஆவணமும் இல்லை.  தாஜ் உல் மஸ்ஜித்தில் ஒரே சமயத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் தொழுகை நடத்த முடியுமாம்.  Britannica.com கூறியுள்ள தகவலின்படி, ஜும்மா மசூதியில் 25,000 பேர் அமர்ந்து தொழுகை நடத்த முடியுமாம்.

Image: PTI

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்