Mission Divyastra: அதி நவீன அக்னி 5 MIRV ஏவுகணை.. வெற்றிகரமாக ஏவி பரிசோதித்த இந்தியா!

Mar 11, 2024,07:14 PM IST

டெல்லி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்னி ரக ஏவுகணை ஒன்றை ஏவிப் பரிசோதித்துள்ளது இந்தியா.  இன்று அக்னி 5 எம்ஐஆர்வி ரக ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடந்த 10 வருடமாக மத்திய அரசின் டிஆர்டிஓ அமைப்பு இந்த ஏவுகணையை உருவாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த ஏவுகணை சோதனை குறித்து பிரதமர் நரேந்திர மோடி  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், "மிஷன் திவ்யாஸ்திரா" திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.




அக்னி 5 ஏவுகணையானது, Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) technology என்ற புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  அதாவது ஒரே ஏவுகணையில் பல்வேறு விதமான  (அணு ஆயுதம் உள்ளிட்ட) ஆயுதங்களைப் பொருத்தி  பல்வேறு இலக்குகளைத் தாக்க முடியும். சிம்பிளாக சொல்வதானால்.. ஒரே ஏவுகணையை வைத்து எதிரிகளின் பல இலக்குகளை எளிதாக காக்க முடியும்.


இன்னொரு விஷயம், இந்தியா உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பத்தில் முழுக்க முழுக்க நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட சென்சார் உள்ளிட்ட சாதனங்களே பொருத்தப்பட்டுள்ளன என்பது முக்கியமானது. இன்றைய சோதனை திட்டமிட்டபடி இருந்ததாகவும், இது வெற்றி பெற்றதாகவும் டிஆர்டிஓ அறிவித்துள்ளது.


யார் யாரிடம் இந்த தொழில்நுட்பம் உள்ளது?




இப்படிப்பட்ட ஏவுகணைகள் மிகச் சொற்பமான நாடுகளிடம்தான் உள்ளன என்பது முக்கியமானது. குறிப்பாக நம்முடைய பிராந்தியத்தில் சீனாவிடம் மட்டும்தான் உள்ளது. பாகிஸ்தானிடம் கிடையாது.


அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சிடம் அவர்களது நீர்மூழ்கி மூலம் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது.


சீனாவிடம், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. ரஷ்யாவிடம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகள் என இரண்டு வகை ஏவுகணைகளிலும் இந்த வசதி உள்ளது.


பாகிஸ்தான் இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வருவதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்