டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரூ. 63,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, பிரான்சிடமிருந்து 26 ரபேல் எம் ரக போர் விமானங்களை (கடற்படையில் பயன்படுத்தக் கூடியது) இந்தியா வாங்கவுள்ளது.
கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களும், நான்கு இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களும் அடங்கும். இவை 2031 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்

ரஃபேல் எம் உலகளவில் மிகவும் மேம்பட்ட கடற்படை போர் விமானங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படை மட்டுமே இந்த ஜெட் விமானத்தை கொண்டுள்ளது.
இந்திய கடற்படையின் புதிய விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இந்த புதிய ரபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் வல்லாதிகத்தை வலுப்படுத்துவதோடு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் உதவும்.
தற்போது இந்தியாவிடம் உள்ள மிக் 29 கே விமானங்களுக்கு மாற்றாக ரபேல் போர் விமானங்கள் இடம் பெறவுள்ளன. இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வைத்துள்ளது. தற்போது கடற்படைக்கான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏடெடுத்து படிச்சதில்ல எழுத்தெல்லாம் உன்னுருவம் ஏடெல்லாம் உன் புகழே !
இனி லஞ்சம் கொடுக்காதீங்க; புகார் கொடுங்க: வாட்ஸ்ஆப் மொபைல் எண்கள் வெளியீடு
உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி: பாமக அன்புமணி தீவிர ஆலோசனை!
Heat Wave warning: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி...இணையத்தைக் கலக்கும் அதிரடித் தகவல்!
பாலியல் வழக்குகளில் நீதிபதிகளுக்கு விழிப்புணர்வு தேவை: உச்ச நீதிமன்றம்
லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்!
தவெக அமைச்சரவையில் சிபிஎம் இடம்பெறாது.. முதல்வர் விஜய்யை சந்தித்த பின் பெ.சண்முகம் உறுதி
வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கிய விவகாரம் : சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு!
{{comments.comment}}