டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரூ. 63,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, பிரான்சிடமிருந்து 26 ரபேல் எம் ரக போர் விமானங்களை (கடற்படையில் பயன்படுத்தக் கூடியது) இந்தியா வாங்கவுள்ளது.
கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களும், நான்கு இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களும் அடங்கும். இவை 2031 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்

ரஃபேல் எம் உலகளவில் மிகவும் மேம்பட்ட கடற்படை போர் விமானங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படை மட்டுமே இந்த ஜெட் விமானத்தை கொண்டுள்ளது.
இந்திய கடற்படையின் புதிய விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இந்த புதிய ரபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் வல்லாதிகத்தை வலுப்படுத்துவதோடு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் உதவும்.
தற்போது இந்தியாவிடம் உள்ள மிக் 29 கே விமானங்களுக்கு மாற்றாக ரபேல் போர் விமானங்கள் இடம் பெறவுள்ளன. இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வைத்துள்ளது. தற்போது கடற்படைக்கான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}