டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரூ. 63,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி, பிரான்சிடமிருந்து 26 ரபேல் எம் ரக போர் விமானங்களை (கடற்படையில் பயன்படுத்தக் கூடியது) இந்தியா வாங்கவுள்ளது.
கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களும், நான்கு இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களும் அடங்கும். இவை 2031 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்

ரஃபேல் எம் உலகளவில் மிகவும் மேம்பட்ட கடற்படை போர் விமானங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படை மட்டுமே இந்த ஜெட் விமானத்தை கொண்டுள்ளது.
இந்திய கடற்படையின் புதிய விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இந்த புதிய ரபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் வல்லாதிகத்தை வலுப்படுத்துவதோடு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் உதவும்.
தற்போது இந்தியாவிடம் உள்ள மிக் 29 கே விமானங்களுக்கு மாற்றாக ரபேல் போர் விமானங்கள் இடம் பெறவுள்ளன. இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வைத்துள்ளது. தற்போது கடற்படைக்கான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி
அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு
பாரதிராஜா நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை
யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...புதிதாக பெயர் சேர்க்க 11.71 லட்சம் பேர் மனு
ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!
இது அண்ணன்-தம்பி பொங்கல்...பராசக்தி ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் சொன்ன செம தகவல்
மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்
{{comments.comment}}