கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!

Apr 28, 2025,03:56 PM IST

டெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் ரூ. 63,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.


இதன்படி, பிரான்சிடமிருந்து 26 ரபேல் எம் ரக போர் விமானங்களை (கடற்படையில் பயன்படுத்தக் கூடியது) இந்தியா வாங்கவுள்ளது.


கையெழுத்திடப்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை கொண்ட விமானங்களும், நான்கு இரட்டை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்களும் அடங்கும். இவை 2031 ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும்




ரஃபேல் எம் உலகளவில் மிகவும் மேம்பட்ட கடற்படை போர் விமானங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படை மட்டுமே இந்த ஜெட் விமானத்தை கொண்டுள்ளது. 


இந்திய கடற்படையின் புதிய விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இந்த புதிய ரபேல் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் கடல் வல்லாதிகத்தை வலுப்படுத்துவதோடு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் உதவும்.


தற்போது இந்தியாவிடம் உள்ள மிக் 29 கே விமானங்களுக்கு மாற்றாக ரபேல் போர் விமானங்கள் இடம் பெறவுள்ளன. இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வைத்துள்ளது. தற்போது கடற்படைக்கான ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!

news

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?

news

தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?

news

எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!

news

அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி

news

தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

news

ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?

news

திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்