மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நடந்து வந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. கடைசி நாளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒற்றை ஆளாக கடுமையாக போராடினார். ஆனால் அவரது போராட்டம் பலன் தரவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும், ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றிருந்தன. 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் மெல்போர்னில் 4வது போட்டி நடந்து வந்தது.

இதில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 474 ரன்களைக் குவித்து விட்டது. அதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 369 ரன்களுக்கு இழந்தது. அதன் பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களி்ல் ஆட்டமிழந்தது.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியது. குறிப்பாக முன்னணி வீரர்கள் சொதப்பித் தள்ளி விட்டனர். கேப்டன் ரோஹித் சர்மா சுத்தமாக பார்மிலேயே இல்லை. மீண்டும் சிங்கிள் டிஜிட்டில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோரும் பொறுப்பின்றி அவுட்டானார்கள்.
இன்று கடைசி நாளில் இந்தியா தனது வீரப் போராட்டத்தில் குதித்தது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனி ஆளாக ரன் குவிக்கப் போராடினார். 84 ரன்களை எடுத்து ஆடிக் கொண்டிருந்தபோது சர்ச்சைக்கிடமான முறையில் அவர் அவுட்டாக்கப்பட்டார்.
நடுக்கள வீரர்கள் நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண முடியாததால் இறுதியில் இந்தியா 155 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம், ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் நதான் லயான் 4 விக்கெட்களைச் சாய்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றால் இந்தத் தொடரை சமன் செய்ய முடியும். இல்லாவிட்டால் ஆஸ்திரேலியா வென்று விடும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}