இது வேற லெவல் கொண்டாட்டம்.. சென்னை மெரீனா பீச்சில்.. உலகக் கோப்பை பைனல்ஸ் லைவ்!

Nov 19, 2023,10:38 AM IST

சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்களுக்கு பிரமாண்டத் திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் கண்டு களிக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது. 

நாட்டின் பல்வேறு  பகுதிகளிலும் போட்டியை கண்டு களிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.




மெட்ரோ ரயில் நிலையங்களில் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஊர்களில் பொது இடங்களில் பிரமாண்டத் திரை கட்டி அதில் போட்டியை ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.


அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சென்னையில் சூப்பரான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.  மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதைக்கு அருகே 28 அடி அகலம் 10 அடி உயரத்தில் பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.


இந்த இடத்திற்கு அருகே மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் போட்டியைக்  கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக  டாய்லெட் வாகனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போட்டியைக்  கண்டு களிக்க மாநகராட்சி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.


தற்போது கடல் காற்று அதிகம் வீசுவதால் திரைக்குப் பாதிப்பு வருமா என்ற அச்சம் உள்ளது. இருப்பினும் பலத்த காற்றுக்கும் கிழிந்து விடாத வகையில்தான் திரை அமைக்கப்படுகிறது. எனவே போட்டியை முழுமையாக கண்டு ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது

சமீபத்திய செய்திகள்

news

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் : சிங்கப்பூரில் இருக்கும் நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

அதிமுக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் ரெட்டி

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலைக்கு எதிரான மனு: விசாரிக்க கோர்ட் மீண்டும் மறுப்பு

news

தனுஷின் அரசியல் கட்சிக் கொடி சர்ச்சை : இயக்குநர் சுப்ரமணிய சிவா விளக்கம்

news

2 மாசம்தான் டைம்.. காலி பண்ணிட்டுக் கிளம்புங்க .. வாடகை வீட்டு துயரங்கள்!

news

98% விழுக்காட்டைத் தாண்டியது.. இந்தியாவின் 6-வது ‘முழு எழுத்தறிவு’ பெற்ற மாநிலம் உத்தரகாண்ட்!

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்