சென்னை: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்களுக்கு பிரமாண்டத் திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியைக் கண்டு களிக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போட்டியை கண்டு களிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில் நிலையங்களில் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல ஊர்களில் பொது இடங்களில் பிரமாண்டத் திரை கட்டி அதில் போட்டியை ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், சென்னையில் சூப்பரான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதைக்கு அருகே 28 அடி அகலம் 10 அடி உயரத்தில் பிரமாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.
இந்த இடத்திற்கு அருகே மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் போட்டியைக் கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக டாய்லெட் வாகனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போட்டியைக் கண்டு களிக்க மாநகராட்சி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
தற்போது கடல் காற்று அதிகம் வீசுவதால் திரைக்குப் பாதிப்பு வருமா என்ற அச்சம் உள்ளது. இருப்பினும் பலத்த காற்றுக்கும் கிழிந்து விடாத வகையில்தான் திரை அமைக்கப்படுகிறது. எனவே போட்டியை முழுமையாக கண்டு ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}