டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள ஊடுறுவி, தீவிரவாத செயல்களைச் செய்து விட்டு தப்ப நினைத்தால் அவர்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
சிஎன்என் நியூஸ் 18 சானலுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராஜ்நாத் சிங். இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப யார் நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். பாகிஸ்தானுக்குள் அவர்கள் ஓடித் தப்ப நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம்.. உள்ளே புகுந்து அவர்களைக் கொல்வோம்.

அண்டை நாடுகளுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்துக் கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது தேவையில்லாமல் நம்மை சீண்டினால் நாமும் சும்மா இருக்க முடிாது. இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை செய்து விட்டு தப்பிப் போய் விடலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம் என்றார் அவர்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குத் நடத்தியதில் இந்திய வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!
வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை
TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?
ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!
அதிர வைத்த எடப்பாடி பழனிச்சாமி வியூகம்.. திமுகவுக்கு 2வது இடம் கூட கிடைக்கலையே!
திராவிட மாடலுக்கு இது தோல்வியா?.. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள்...சொல்வது என்ன?
சட்டசபையில்.. தவெக விற்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டால் என்ன செய்வார் விஜய்?
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா பானர்ஜி... அதிரடி காட்டிய பாஜக முன்னிலை!
அடிச்ச பத்து பேருமே டான்தான்.. தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப் போட்ட விஜய்!
{{comments.comment}}