இந்தியாவைத் தாக்கி விட்டுத் தப்ப நினைத்தால்.. பாகிஸ்தானுக்குள் புகுந்து அடிப்போம்.. ராஜ்நாத் சிங்

Apr 06, 2024,01:29 PM IST

டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள ஊடுறுவி, தீவிரவாத செயல்களைச் செய்து விட்டு தப்ப நினைத்தால் அவர்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


சிஎன்என் நியூஸ் 18 சானலுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராஜ்நாத் சிங். இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப யார் நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். பாகிஸ்தானுக்குள் அவர்கள் ஓடித் தப்ப நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம்.. உள்ளே புகுந்து அவர்களைக் கொல்வோம்.




அண்டை நாடுகளுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்துக்  கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது தேவையில்லாமல் நம்மை சீண்டினால் நாமும் சும்மா இருக்க முடிாது. இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை செய்து விட்டு தப்பிப் போய் விடலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம் என்றார் அவர்.


2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குத் நடத்தியதில் இந்திய  வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

news

ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

அதிகம் பார்க்கும் செய்திகள்