இந்தியாவைத் தாக்கி விட்டுத் தப்ப நினைத்தால்.. பாகிஸ்தானுக்குள் புகுந்து அடிப்போம்.. ராஜ்நாத் சிங்

Apr 06, 2024,01:29 PM IST

டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள ஊடுறுவி, தீவிரவாத செயல்களைச் செய்து விட்டு தப்ப நினைத்தால் அவர்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


சிஎன்என் நியூஸ் 18 சானலுக்கு அளித்துள்ள பேட்டியில்தான் இவ்வாறு கூறியுள்ளார் ராஜ்நாத் சிங். இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப யார் நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம். பாகிஸ்தானுக்குள் அவர்கள் ஓடித் தப்ப நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம்.. உள்ளே புகுந்து அவர்களைக் கொல்வோம்.




அண்டை நாடுகளுடன் எப்போதும் நல்லுறவை வளர்த்துக்  கொள்வதையே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது தேவையில்லாமல் நம்மை சீண்டினால் நாமும் சும்மா இருக்க முடிாது. இந்தியாவுக்குள் புகுந்து தீவிரவாத செயல்களை செய்து விட்டு தப்பிப் போய் விடலாம் என்று நினைத்தால் நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம் என்றார் அவர்.


2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கிய சமயத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புலவாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குத் நடத்தியதில் இந்திய  வீரர்கள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்