லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கடைசி நிமிடத்தில் அட்டகாசமான வெற்றியைத் தட்டிப் பறித்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வந்தது. இதில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும், டிரா செய்தாலும் தொடரை இழப்போம் என்ற நிலையில் இந்தியா இருந்தது. வென்றால் தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் இந்திய வீரர்களும் சரி ரசிகர்களும் சரி திக் திக் பதட்டத்துடன்தான் டெஸ்ட் தொடரை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில், கடைசி நேரத்தில் இந்தியா வெற்றியை தட்டிப் பறித்து ரசிகர்களுக்கு குஷியைக் கொடுத்து விட்டது. இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா. இதன் மூலம் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது.

இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் இருவரும் சதமடித்தும் கூட, இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் அவர்களது முயற்சி பலனற்றுப் போனது. 123 ஆண்டுகளில் ஓவல் மைதானத்தில் அதிகபட்ச ரன் சேஸிங்கைச் செய்ய இங்கிலாந்து எடுத்த முயற்சி, ஐந்தாம் நாள் முதல் பகுதியிலேயே தோல்வியடைந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ். முகமது சிராஜ் ஒரு மணி நேரத்திற்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது டெஸ்ட் வாழ்க்கையின் 5வது ஐந்து விக்கெட் வீழ்த்தலைப் பதிவு செய்து, இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.
முன்னதாக, இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், முந்தைய நாள் ஆட்டமிழக்காமல் இருந்த ஜேமி ஓவர்டன் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸின் போது தோள்பட்டை காயம் காரணமாக டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டிருந்த கிறிஸ் வோக்ஸ், ஆடுகளத்தின் ஓரத்தில் இடது கையில் பேட்டிங் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. வோக்ஸ் காயம் காரணமாக ஒரு கையால் பேட் செய்தாலும், கஸ் அட்கின்சனுடன் இணைந்து இங்கிலாந்தை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
ஆட்டத்தின் முதல் ஓவரில், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஓவர்டன் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து, இங்கிலாந்து மீதிருந்த அழுத்தத்தைக் குறைத்தார். ஆனால் ரசிகர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சிராஜ் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில், அகலமான பந்தைத் தட்டிவிட்ட ஸ்மித்தை வெளியேற்றினார். பின்னர், எல்.பி.டபிள்யூ முறையில் ஓவர்டனை அவுட்டாக்கினார்.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும்.. தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்கள் முக்கியமில்லை...பதவி தான் முக்கியம்...விஜய்யை விளாசிய டி.கே. எஸ். இளங்கோவன்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்
செங்கோட்டையன் செல்லாக்காசு.. யாருமே ஏற்றுக் கொள்ளாததால் தவெகவுக்கு சென்றுள்ளார்: செல்லூர் ராஜூ
அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பாஜக எச்.ராஜா எப்படி இருக்கிறார்? அடுத்தடுத்து நலம் விசாரிக்கும் தலைவர்கள்
823 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயமா பிப்ரவரி 2026? – ஒரு சுவாரஸ்யமான அலசல்
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
{{comments.comment}}